மனைவியின் கள்ளக்காதலால் குழந்தைகளுடன் விஷம் குடித்த கணவர்: அதிர்ச்சி சம்பவம்

  • IndiaGlitz, [Tuesday,July 21 2020]

மனைவியின் கள்ளக் காதலால் அவமானம் அடைந்த கணவர் ஒருவர் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாவட்டம் பாலமேடு என்ற பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குமார். இவருக்கு உஷா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் உஷா பாலமேடு பேரூராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் அதே பேரூராட்சியில் தூய்மை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் கனகராஜ் என்பவருக்கும் திடீரென காதல் அரும்பியது

இந்த கள்ளக்காதல் குறித்து குமாருக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்த அவர், இருவரையும் எச்சரித்துள்ளார். ஆனால் இருவரும் தங்கள் உறவை கைவிடவில்லை. இதனால் கனகராஜை கொலை செய்ய முடிவு செய்த குமார், நேராக அரிவாளை எடுத்துக் கொண்டு அவருடைய அலுவலகம் சென்று அவரை சரமாரியாக வெட்டினார். இதனால் கனகராஜ் இறந்து விட்டார் என எண்ணி குமார் தனது குழந்தைகளுடன் தலைமறைவானார். ஆனால் கனகராஜ் படுகாயத்துடன் உயிர் தப்பினார் என்பதும் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது,

இந்த நிலையில் மனைவி தன்னை ஏமாற்றியதால் ஏற்பட்ட அவமானம், கனகராஜை கொலை செய்ததால் ஜெயிலுக்கு போக வேண்டிய நிலை ஆகியவற்றை உணர்ந்த குமார், மன உளைச்சலுக்கு ஆளாகி இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மூவரையும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக மரணம் அடைந்துவிட்டதாகவும், குமார் மட்டும் தற்போது உயிருக்கு போராடியவாறு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் இவை அனைத்திற்கும் காரணமான உஷா, தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவரை போலீஸ் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

More News

வனிதாவின் அதிரடி முடிவு: சமூக வலைத்தளங்களில் பரபரப்பு

கொரோனா பரபரப்பையும் மீறி வனிதா விஜயகுமார்-பீட்டர்பால் திருமணம் குறித்த செய்திகள் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக கடந்த சில நாட்களாக இடம்பெற்றது என்பது தெரிந்ததே

லம்போர்கினி காரில் ரஜினியுடன் சென்றது யார் யார்? மீண்டும் டிரெண்ட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறார் என்பதும் சமீபத்தில் கூட அவர் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கூறிய 'சத்தியமா விடவே கூடாது'

கொரோனா ஒருவழியா முடிவுக்கு வந்துடும் போல… ஆக்ஸ்பேஃர்டு பல்கலைக் கழகத்தின் சிறப்பு அறிவிப்பு!!!

உலகளவில் கொரோனா தடுப்பூசி ஆய்வில் தற்போது ஆக்ஸ்பேஃர்டு பல்கலைக் கழகம் முன்னிலை பெற்று வருவதை செய்திகள் எடுத்துக் காட்டுகின்றன.

அருள்நிதியின் அடுத்த க்ரைம் துப்பறியும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

வம்சம்','மௌனகுரு','தகராறு' 'டிமான்டி காலனி' 'ஆறாது சினம்' உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்த அருள்நிதி நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகவிருப்பதாகவும்,

கருப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலில் 500 வீடியோக்கள் நீக்கம்: சென்னை போலீசார் அதிரடி

கருப்பர் கூட்டம் என்ற 'யு டியூப்' சேனலில் சமீபத்தில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு வீடியோ வெளியானதால் முருகபக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.