விமான விபத்தில் 257 ராணுவ வீரர்கள் பலி: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Wednesday,April 11 2018]

அல்ஜீரியா நாட்டில் நடந்த விமான விபத்து ஒன்றில் அதில் பயணம் செய்த 257 அல்ஜீரிய நாட்டு ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அல்ஜீரியாவில் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 257 ராணுவ வீரர்களுடன் பெளஃபாரிக் விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது. ஆனால் ரன்வேயை விட்டு கிளம்பிய ஒருசில நிமிடங்களில் திடீரென அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 257 ராணுவ வீரர்களும் பரிதாபமாக பலியாகினர். 

இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரணைக்கு அல்ஜீரியா அரசு உத்தரவிட்டிருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து குறித்து அல்ஜீரியா நாட்டின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முகமது அகூர் கூறியபோது, 'விபத்துக்குள்ளான விமானத்தில் முழுக்கவே ராணுவ வீரர்கள் பயணம் செய்ததாகவும், விபத்தில் மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் சரியான எண்ணிக்கை எவ்வளவு என்று இப்போது கூற முடியாது என்றும் கூறினார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்./

More News

எங்க பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க: பிரபல பாடலாசிர்யரின் கவிதை

காவிரி பிரச்சனையில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி திரையுலகினர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். இன்னும் சிலர் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது ஆவேச கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ரயில் மீதேறி போராட்டம் செய்த பாமக தொண்டருக்கு நேர்ந்த பரிதாபம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தால் சிலசமயம் அசம்பாவிதமும் நடந்து வரும்

சென்னை ஐபிஎல் போட்டிகள் திடீர் மாற்றம்: வெற்றியா? தோல்வியா?

சென்னையில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருந்தது.

காவிரி தாயுடன் பிரபல நடிகர் உரையாடிய கவிதை

காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க  வேண்டும் என்பதற்காக 25 ஆண்டுகால சட்டப்போராட்டத்திற்கு பின் கிடைத்த தீர்ப்பையும் மத்திய அரசு அமல்படுத்தவில்லை

ஸ்டைலா கெத்தா திரும்பி வந்த சிஎஸ்கே!

மஞ்சர் படை வீரர்கள் சேப்பாக்கத்தில் அணிவகுத்து 1000 நாட்களுக்கு மேலாகிவிட்டது.