வெறும் 3 வார்த்தைக்கு 400 கோடி சம்பளமா? பிரபல நடிகர் குறித்த ஆச்சர்யத் தகவல்!

சினிமா என்பதே ஒரு கற்பனைச் சித்திரம்தான். இப்படி இருக்கும்போது கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஹாலிவுட் சினிமாவிற்காக ஒரு முன்னணி நடிகர் வெறும் 3 வார்த்தைகளைப் பேசிவிட்டு அதுவும் நடிக்காமல் 400 கோடிகளைத் தாண்டி சம்பளம் வாங்கி இருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம். உண்மையில் அப்படியொரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

கற்பனை கலந்து ரசிகர்களுக்கு மாயாஜாலத்தை காட்டிவிடும் ஹாலிவுட் சினிமா வரிசையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “Guardian of the Galaxy”. இந்தத் திரைப்படத்தில் Thor, Rocket போன்ற கதாபாத்திரங்கள் முதன்மையான இடத்தைப் பிடித்தது. கூடவே The tree man என்ற கற்பனைப் பாத்திரமும் இதில் இடம்பெற்றிருந்தது.

மனிதனைப் போன்ற தோற்றம் கொண்ட இந்தக் கற்பனைப் பாத்திரம் படம் முழுக்கவே வெறும் 3 வார்த்தைகளை மட்டுமே திரும்ப திரும்ப பேசியிருக்கும். ஆனால் இதற்கு பின்னணி பேசிய பிரபல ஹாலிவுட் நடிகர் Vin Diesel க்கு மார்வெல் மற்றும் டிஸ்னி ஃபோர்க் நிறுவனம் 54 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பளமாகக் கொடுத்துள்ளது. இது இந்திய மதிப்பில் 400 கோடிகளைத் தாண்டுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Guardian of the Galaxy திரைப்படத்தில் இடம்பெற்ற The tree man கதாபாத்திரம் ரசிகர்களுக்கு தீனிபோடும் விதத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தக் கதாபாத்திரம் அதிகம் பேசாமல் I am Groot எனும் 3 வார்த்தைகளை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான உணர்வுகளோடு சொல்லும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த The tree man கதாபாத்திரத்திற்கு Fast and Furious வரிசை திரைப்படங்களில் நடித்து உலகப்புகழ்பெற்ற நடிகர் Vin Diesel குரல் கொடுத்திருந்தார். இதற்கான மார்வெல் மற்றும் டிஸ்னி ஃபோர்ட் நிறுவனம் 54 மில்லியன் டாலர்களை சம்பளமாகக் கொடுத்துள்ளது. இதுகுறித்த தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

More News

வேற லெவல் புதிய லுக்கில் தல அஜித்: வைரல் புகைப்படங்கள்!

தல அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் அஜித்தின் புதிய லுக் குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா? வைரலாகும் நயன் வீடியோ!

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என நயன்தாரா கூறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

வாங்கோ வாத்தியாரே நாமளும் ஊர சுத்தி வரலாம்: பதிலடி கொடுத்த வேம்புலி!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் குறித்த மீம்ஸ் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி

சமூக நீதி பேசிவிட்டு, தூய்மைப்பணியாளர்களுக்கு வஞ்சகம் செய்கிறது அரசு.....! சீமான் காட்டம்.....!

திமுக அரசு சமூக நீதியென்று பேசி அரசியல் செய்து ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் சமூகத்தில் விளிம்பில் உள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு வஞ்சகம் செய்து ஏமாற்றுகிறது

நுழைவு வரியை முழுமையாக செலுத்திய விஜய்: எவ்வளவு தெரியுமா?

பிரபல நடிகர் விஜய் தான் வாங்கிய வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்