ஹாட்ஸ்டாரின் அசத்தல் அறிவிப்பு..இதயத்தை வருடும் புதிய சீரிஸ்..!

  • IndiaGlitz, [Saturday,February 10 2024]

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பல புதிய வெப் சீரிஸ் அவ்வப்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது ஒரு மருத்துவமனையின் பின்னணியில், இளமை துள்ளும் காதல் கலந்த, இதயத்தை வருடும் புதிய சீரிஸ் ஆரம்பமாகவுள்ளது.

ஒரு மனிதனின் இதயத்தில் நான்கு அறைகள் இருப்பது போல், மருத்துவமனையில் வேலை பார்க்கும் தனது வாழ்க்கையில் நான்கு உலகங்கள் இருக்கின்றன என்பதை மருத்துவர் ரீனா விளக்குவது தான் இந்த வெப் சீரிஸ் கதை.

ஹார்ட்பீட் என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த வெப்சீரீஸின் புரமோ வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த மருத்துவர் ரீனா நான்கு உலகங்களையும் எப்படி விளக்குகிறார்? இறுதியில் இந்த உலகம் அவரது காதல் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பது குறித்த காட்சிகள் புரமோவில் உள்ளது. ஏற்கனவே ’லேபிள்’ உள்பட பல சீரியல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த வகையில் இந்த வெப்சீரிஸ் மக்கள் மனதை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுள்ளன

இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியானேஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த சீரிஸை A Tele Factory நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த சீரிஸுக்கு சரண் ராகவன் இசையமைக்க, விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங் பணிகளை செய்கிறார்.

இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

More News

இயக்குனர் கனவில் இருந்த 'அஞ்சாதே' நடிகர் திடீர் மரணம்.. என்ன ஆச்சு?

'அஞ்சாதே' படத்தில் நடித்த நடிகர் விரைவில் இயக்குனராக போகும் கனவில் இருந்த நிலையில் திடீரென அவர் மூச்சு திணறல் காரணமாக காலமாகிவிட்டார் என்ற தகவல் திரையுலகினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திரைக்கு வரும் முன்பே சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற சிவகார்த்திகேயன் படம்..!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி வரும் 'கொட்டுக்காளி' என்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில் ரிலீசுக்கு முன்பே இந்த படம் சர்வதேச

திடீரென போலீசில் புகார் அளித்த மகேஷ்பாபுவின் மனைவி: ஒரே மகளுக்கு என்ன பிரச்சனை?

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா ஹைதராபாத் காவல் துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இனி யூடியூப், சமூக வலைதளங்களுக்கும் தேசிய விருது: மத்திய அரசு அதிரடி திட்டம்..!

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி சிறப்பான யூடியூப் மற்றும் சமூக வலைதள பதிவுகளுக்கும் தேசிய விருதுகள் வழங்க  மத்திய அரசு

பிரதீப் அந்தோணி ஒப்புக்கொண்ட திரைப்படம்.. அட்வான்ஸ் பணம் மட்டும் இவ்வளவா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் அந்தோணி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் வாங்கியதாக செக் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த பதிவு இணையத்தில்