காதலை தவிர்த்த நயன்தாராவும் த்ரிஷாவும்

  • IndiaGlitz, [Wednesday,July 13 2016]

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளாக விளங்கி வருபவர்கள் த்ரிஷாவும் நயன்தாராவும் என்பது அனைவரும் அறிந்ததே. இளம் நடிகைகளுக்கு போட்டியாக இன்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து வரும் இவர்கள் ஒருவருக்கொருவர் நல்ல நட்புடனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சற்குணம் தயாரிப்பில் தாஸ் ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'டோரா' என்ற மர்ம படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதையும் இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியே இல்லை என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
அதேபோல் இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் 'மோகினி' படத்திலும் இதுவரை நாயகன் என்று யாரும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளதால் இந்த படத்தில் த்ரிஷாவுக்கும் ஜோடி இருக்க வாய்ப்பில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோக்களுடன் மரத்தை சுற்றி காதல் செய்யும் நாயகிகளில் மத்தியில் த்ரிஷா, நயன்தாரா இருவரும் கதைக்கும், நாயகி கேரக்டருக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவின் 'AAA' படத்தில் ஸ்ரேயாவின் கேரக்டர்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

முடிவுக்கு வந்தது ராகவா லாரன்ஸின் அடுத்த படம்

கடந்த ஆண்டு 'காஞ்சனா 2' என்ற சூப்பர் ஹிட் கொடுத்த ராகவா லாரன்ஸ் நடித்து வரும் அடுத்த படம் 'மொட்டசிவா கெட்ட சிவா'...

சுந்தர் சி-தேனாண்டாள் பிலிம்ஸ் படத்தில் இணைந்த மிகப்பெரிய டெக்னீஷியன்

கோலிவுட் தயாரிப்பு நிறுவனங்களின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் 100வது படம்...

'கபாலி' இயக்குனரின் அடுத்த ஆசை இதுதான்

இன்று உலகமே ஜூலை 22ஆம் தேதியை எதிர்பார்த்து கொண்டிருக்கின்ற ஒரு விஷயம் என்னவெனில் அது கபாலி' ரிலீஸ் தினம் என்பதால்...

இரண்டே நாட்களில் 'இருமுகன்' டீசர்.

சீயான் விக்ரம் முதன்முதலாக இருவேடங்களில் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில்...