ஜோதிகாவின் அடுத்தகட்ட பணி தொடக்கம்

  • IndiaGlitz, [Friday,January 27 2017]

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா, திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகாலம் திரையுலகில் இருந்து விலகியிருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன ஜோதிகா, அந்த படம் கொடுத்த வெற்றி காரணமாக தற்போது அவர் '36 வயதினிலே' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. நேற்று முதல் ஜோதிகா இந்த படத்திற்காக சொந்தக்குரலில் டப்பிங் செய்து வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் தன்னுடைய பகுதியின் டப்பிங் பணியை முடித்துவிடுவார் என்று கூறப்படுகிறது.
ஜோதிகா, நாசர், லிவிங்ஸ்டன், சரண்யா, பானுப்ரியா, ஊர்வசி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'குற்றம் கடிதல்' பட இயக்குனர் பிரம்மா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில் மணிகண்டன் ஒளிப்பதிவில், பிரேம் எடிட்டிங்கில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.