ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'நான் சிரித்தால்' சென்சார் தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,January 08 2020]

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’மீசையை முறுக்கு’ மற்றும் ’நட்பே துணை’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்து வெற்றி படமானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த அடுத்த திரைப்படம் ’நான் சிரித்தால்’. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தளபதி விஜய் இந்த படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டியதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் ’நான் சிரித்தால்’ படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ’யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிகுமார், பாண்டியராஜன், எருமைச்சாணி விஜய், முனிஷ்காந்த், ரவி மரியா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராணா இயக்கியுள்ளார். சுந்தர் சியின் அவ்னி மூவீஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

More News

என்னைப் பற்றி பேசுங்கள்.. குடும்பத்தை இழுக்காதீர்கள்..! ரோஹித் ஷர்மா.

என்னைப் பற்றிப் பேசுங்கள். ஆனால் என் குடும்பத்தை இதில் இழுக்காதீர்கள். எனது குடும்பத்தினர் வேறு எதையும் பற்றி உண்மையிலேயே அக்கறை காட்டாததால் அவர்களை இதில் இழுக்க வேண்டாம்.

என்னைப் பற்றி பேசுங்கள்.. குடும்பத்தை இழுக்காதீர்கள்..! ரோஹித் ஷர்மா.

என்னைப் பற்றிப் பேசுங்கள். ஆனால் என் குடும்பத்தை இதில் இழுக்காதீர்கள். எனது குடும்பத்தினர் வேறு எதையும் பற்றி உண்மையிலேயே அக்கறை காட்டாததால் அவர்களை இதில் இழுக்க வேண்டாம்.

உங்கள் ஃபேஸ்புக் கணக்கு இன்னும் பாதுகாப்பாக போகிறது..வருகிறது புதிய அப்டேட்.

2014ல் ஃபேஸ்புக் பயனாளர்களுக்கான பிரைவஸி அமைப்புகள் (Privacy Checkup tool) அறிமுகப்படுத்தப்பட்டன. இதை இன்னும் மேம்படுத்திய வெர்ஷன் தற்போதுவெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவை நினைத்தால் எனக்கு பயமாக இருக்கின்றது: பிரபல நடிகை

இந்தியாவை நினைத்தால் தனக்கு பயமாக இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

ஏகப்பட்ட மனைவிகள்: 10க்கும் மேற்பட்ட கள்ளக்காதலிகள்: ஒரு மாற்றுத்திறனாளியின் பகீர் வாக்குமூலம்!

பார்வையில்லாத மாற்றுத் திறனாளி ஒருவர் பல பெண்களை திருமணம் செய்தும் பத்துக்கும் மேற்பட்ட  கள்ளக்காதலிகளிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளதும் அவரது வாக்குமூலத்தின் தெரியவந்துள்ளதால்