தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,September 08 2015]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோலிவுட் திரையுலகம் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் சங்க தேர்தலை எவ்வித பிரச்சனையும் இன்றி நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்பநாபனை தேர்தல் நடத்தும் அலுவலராக நியமித்து உத்தரவிட்டது. இதன்படி தேர்தல் தேதியை முடிவு செய்வது குறித்து சரத்குமார் மற்றும் விஷாலுடன் ஆலோசனை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி பத்பநாபன், நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எபாஸ் பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் நடிகர் சங்க தேர்தலில் 3,139 பேருக்கு வாக்கு அளிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் சுறுசுறுப்பாகியுள்ளதாகவும், விரைவில் தங்கள் அணியினர்களின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.