ஹெலிகாப்டர் விபத்தில் தப்பித்த ஒரே வீரரும் காலமானார்: சோகத்தில் இந்திய மக்கள்!

  • IndiaGlitz, [Wednesday,December 15 2021]

சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து உயிர் தப்பிய விமானப்படை கேப்டன் வருணசிங் அவர்கள் சற்றுமுன்னர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய விமானப் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் பயணம் செய்தனர். இந்த ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளானது என்பதும் இந்த விபத்தில் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பதும் விமானப்படை கேப்டன் வருண்சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கேப்டன் வருண் சிங் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனையில் இருந்து தகவல் வந்த நிலையில் சற்று முன்னர் அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவே சோகத்தில் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் மரணம்!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விங் கேப்டன் வருண் சிங் கவலைக்கிடமான நிலையில்

ஒரு கப் காபி போதுமா? பாலியல் சார்ந்த பிரச்சனைக்கு எளிய தீர்வு!

நவீன வாழ்க்கை முறையில் ஆண்களுடைய ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் தொடர்ந்து சிக்கலாகவே இருந்து வருகிறது.

புல்லால்குழல் இசையில் ரசிகர்களை மயக்கும் இளம் நடிகை… வேறலெவல் வீடியோ!

தமிழ் சினிமாவில் நடிகர் பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2019 இல் வெளியான திரைப்படம் “சார்லி சாப்ளின்2“. இந்தப்

என் வாழ்க்கையில இனிமேல் உன்கிட்ட பேசவே மாட்டேன்: அக்சரா கூறுவது யாரை?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்கில் ராஜூ போட்டியாளர்களின் புகைப்படங்கள் வரைந்த பெட்டியின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்பதும், அவரை இழுக்க முடியாமல்

மிஸ் யுனிவர்ஸ் அழகியுடன் தேசிய கொடியை கையில் பிடித்திருக்கும் தமிழ் பட நடிகை!

சமீபத்தில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற அழகியுடன் பிரபல நடிகை ஒருவர் தேசிய கொடியை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.