தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை… சென்னைக்கும் பாதிப்பா?

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை மற்றும் லேசான மழைபொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு உள்ளது. அதன்படி மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுதினம் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரத்தில் 12 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் குன்னூரில் 9 செ.மீ மழையும், தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

More News

எங்க வீட்டு மாடியிலதான் கீர்த்திசுரேஷ் இருக்காங்க: விஜய் நண்பரின் மனைவி!

தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் தொலைக்காட்சி நடிகருமான சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தன்னுடைய வீட்டின் மாடியில் தான் கீர்த்தி சுரேஷ்

'I am Back'ன்னு சொல்லுங்க: தவசியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர்!

பிரபல குணசித்திர நடிகர் தவசி அவர்கள் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வில்லன் நடிகராக அறிமுகமாகும் இணை இயக்குனர்!

வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், பாட்டு வாத்தியார் உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் டிபி கஜேந்திரன்.

2020 நிலைமைக்கு காரணம் ஒரு ஸ்பூன் அளவுதான்… கொரோனா குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்!!!

2020- இந்த அளவிற்கு மோசமாக இருக்கும் என்று உலகத்தில் யாருமே நினைத்து பார்த்திருக்க மாட்டர்கள்.

மணிக்கூண்டு டாஸ்க்: லக்சரி பட்ஜெட்டுக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக மணிக்கூண்டு டாஸ்க் நடந்த நிலையில் இந்த டாஸ்க்கில் 5 அணிகளாக பிரிக்கப்பட்டனர். இதில் அர்ச்சனா மற்றும் ஷிவானி