ஓய்வுபெற மூன்றே நாட்கள் இருந்த நிலையில் கொரோனாவால் பலியான நர்ஸ்: அதிர்ச்சி தகவல் 

  • IndiaGlitz, [Saturday,June 27 2020]

இம்மாதம் 30ஆம் தேதி அதாவது இன்னும் மூன்று நாட்களில் ஓய்வுபெற இருந்த தலைமை நர்ஸ் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசு மருத்துவமனையில் தலைமை நர்சாக பணிபுரிந்து வந்தவர் விக்டோரியா ஜெயமணி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். அவருக்கு ஏற்கனவே இருதய சம்பந்தமான நோய் மற்றும் சர்க்கரை நோய் இருந்ததாக தெரிகிறது. கொரோனாவால் பலியான தலைமை நர்ஸ் ஜெயமணி அவர்களுக்கு அம்மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்

நர்ஸ் ஜெயமணி அவர்கள் இம்மாதம் 30ஆம் தேதி ஓய்வு பெற இருந்தார் என்றும், ஓய்வு பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அவர் கொரோனாவால் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவருடைய உறவினர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நர்ஸ் ஜெயமணி மெடிக்கல் லீவ் எடுத்துக்கொண்டு உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்டதாகவும் அந்த திருமணத்தின் போதுதான் அவருக்கும் அவருடைய கணவருக்கும் கொரோனா தொற்று பரவியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது அவருடைய கணவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

லிப்கிஸ் கொடுத்து மோதிரம் மாற்றிய பீட்டர்பால்: வனிதா திருமணத்தின் சுவாரஸ்வமான தகவல்

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்யவிருப்பதாகவும் ஜூன் 27ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இண்டர்நெட் இல்லை, ஸ்மார்ட்போன் இல்லை: ஸ்பீக்கர் வைத்து பாடம் நடத்திய பள்ளி ஆசிரியர்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் திறக்கவில்லை என்பதும், தற்போது ஒரு சில பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன

லாட்ஜில் எடுத்த ரகசிய வீடியோ: மயிலாப்பூர் இளம்பெண்ணின் பகீர் புகார்

தன்னை உயிருக்கு உயிராக காதலித்த காதலருடன் லாட்ஜில் ரூம் போட்டு தங்கி ஜாலியாக இருந்ததாகவும், அப்போது எடுத்த வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்து காதலன் தன்னை மிரட்டுவதாகவும்

கொரோனா உயிரிழப்பு: ஜேசிபி வாகனத்தைக் கொண்டு உடலை அகற்றிய அவலம்!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை உலகச் சுகாதார நிறுவனம் நெறிப்படுத்தி வழங்கியிருக்கிறது.

செங்கல்பட்டு, மதுரையில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு: சொந்த ஊர் சென்றவரகள் கலக்கம்

தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையை காலி செய்து விட்டு அவரவர் சொந்த ஊருக்கு