அவர் இயக்குனர் அல்ல, பெண்களை ஆயுதமாக பயன்படுத்தும் புரோக்கர்: தமிழ் நடிகை ஆவேசம்

பிரபல இயக்குனர் ஒருவரை அவர் இயக்குனர் அல்ல, பெண்களை தவறாக பயன்படுத்தும் புரோக்கர் என தமிழ் நடிகை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய ’நெஞ்சிருக்கும் வரை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூனம் கவுர். அதன்பிறகு அவர் ’உன்னை போல் ஒருவன்’ ’பயணம்’ ’வெடி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பவன் கல்யாணின் ’பீம்லா நாயக்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்னால் நடந்தது. இந்த விழாவில் பவன்கல்யாண் பேச்சால் தான் ஈர்க்கப்பட்டதாகவும், பவன் கல்யாணின் மிகச்சிறந்த பேச்சுகளில் ஒன்று என்றும் இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

இந்த டுவிட்டுக்கு பதிலளித்துள்ள நடிகை பூனம் கவுர், ‘நடப்பதெல்லாம் ஒன்றுமே தெரியாததுபோல் புன்னகைத்தபடி தவறான வேலைகளை செய்யும் ஒரு இயக்குனர். இன்னொருவர் தனிப்பட்ட நலனுக்காக மற்றவர்களை தவறாக பயன்படுத்திக் கொள்பவர். அரசியல் ரீதியாக இழிவுபடுத்துவது இவர்களுக்கு கை வந்த கலை. இந்த இரண்டு இயக்குனர்களுமே பெண்களை ஆயுதமாக பயன்படுத்தும் புரோக்கர்கள்’ என்று கூறியுள்ளார்.

பூனம் கவுர் விமர்சனம் செய்தவர்களில் ஒருவர் ராம்கோபால்வர்மா என்பது தெரிந்தாலும் இன்னொரு இயக்குனர் யார் என நெட்டிசன்களுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More News

வெங்கட்பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெங்கட்பிரபு இயக்கிய 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் இயக்கத்தில் உருவான அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

டால்பினுடன் குடும்பத்தோடு கொஞ்சி விளையாடும் ரம்பா: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் திரை உலகில் கடந்த 90 களில் பிரபலமாக இருந்த நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் டால்பினுடன் கொஞ்சி விளையாடிய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 3வது வழக்கு: மீண்டும் கைது!

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் 2 வழக்குகளில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இன்று முடிவு தெரிந்துவிடும்… பீதியில் உக்ரைன் அதிபர் வெளியிட்ட வீடியோ!

உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ கைப்பற்றுவதற்காக ரஷ்ய படைகள் இன்று தாக்குதல் நடத்தக் கூடும் என்று உக்ரைன் அதிபர்

கோலி இல்லாத நேரத்தில் ஹிட்மேன் ரோஹித்தின் சாதனை… உற்சாகத்தில் கொண்டாடும் ரசிகர்கள்!

முன்னாள் கேப்டன் விராட் கோலி இலங்கைக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் விளையாடவில்லை. இந்நிலையில் ஹிட் மேன் ரோஹித் சர்மா