அன்றே சொன்ன ரஜினி: டுவிட்டரில் டிரண்டாகும் ஹேஷ்டேக்

  • IndiaGlitz, [Tuesday,October 09 2018]

தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால்தான் அமைதியாக சென்று கொண்டிருந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது என்று கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் கூற தூத்துகுடிக்கு சென்ற ரஜினிகாந்த் கூறினார்.

ரஜினி சொன்ன அந்த சமூக விரோதிகள் யார் என்பதை அவரே அடையாளம் காட்ட வேண்டும் என்று கூறிய பெரும்பாலான அரசியல்வாதிகள் உரிமைக்காக போராடுபவர்களை சமூக விரோதிகள் என்று ரஜினி கூறியதாக திரித்து கூறினர். இவ்வாறு கூறியவர்களில் ரஜினியின் நெருங்கிய நண்பர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து 20 அமைப்புகள் மீது நேற்று சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த அமைப்புகளின் தூண்டுதலினால்தான் ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது என்ற ரீதியில் சிபிஐ தனது விசாரணையை தொடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டுவிட்டரில் #அன்றே_சொன்ன_ரஜினி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இந்த ஹேஷ்டேக்கில் உண்மை ஒரு நாள் வெல்லும். இந்த உலகம் உன் பெயர் சொல்லும்... அன்று ஊரே போற்றும் மனிதன், நீயே நீயே என்றும், அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும் ...அது அந்த காலம், அரசன் இன்று கொள்வான்...தெய்வம் 'அன்றே' கொள்ளும் ...இது இந்த காலம்...இந்த ஜென்மத்துல பண்ண பாவம், இந்த ஜென்மத்துலே அனுபவிக்கனும் என்றும் ரஜினிக்கு ஆதரவான கருத்துக்கள் டுவிட்டரில் பதிவாகி வருகிறது.

More News

மன்சூர் அலிகானின் 3வது மனைவி கூறிய அதிர்ச்சி புகார்

விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன்பின்னர் வில்லன் மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருபவர் நடிகர் மன்சூர் அலிகான்.

ஆளுனர் கொடுத்த அதிரடி புகார்: நக்கீரன் ஆசிரியர் திடீர் கைது!

ஆளுனர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நயன்தாரா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

தமிழ் திரையுலகில் ஒரு நடிகை ஒருசில ஆண்டுகள் கதாநாயகியாக நடிப்பதே பெரிய விஷயம். இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

சென்னை காவல்துறை ஆணையருடன் கருணாகரன் சந்திப்பு! புகார் அளித்தாரா?

சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் பேசியிருப்பார். இந்த பேச்சு சில நாட்களாக தமிழக அரசியலில் புயலை கிளப்பியது.

பாலியல் புகாரில் வைரமுத்து: சின்மயி தந்த அதிர்ச்சி தகவல்

பாடகி சின்மயி கடந்த சில நாட்களாக தன்னுடைய இளவயதில் ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்த கசப்பான அனுபவத்தையும், தனக்கு நெருக்கமான பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் அசம்பாவித சம்பவங்களையும்