ரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ்?

  • IndiaGlitz, [Saturday,December 29 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வரும் 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் அவர் அரசியல் களத்தில் குதிப்பதற்குள் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கிவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் உள்பட பல பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஹாரீஸ் ஜெயராஜ் பெயரும் அந்த பட்டியலில் இருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஹாரீஸ் ஜெயராஜ், 'கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா உள்பட பல பெரிய நடிகர்களின் படத்தில் பணிபுரிந்துவிட்டேன். அதேபோல் ரஜினி படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷமாக ஏற்று கொள்வேன்' என்று தெரிவித்துள்ளார். ரஜினி படத்திற்கு இசையமைக்க முதல்முறையாக ஹாரீஸ் ஜெயராஜூக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

முடிவுக்கு வந்தது நயன்தாராவின் அடுத்த படம்

தல அஜித்துடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில்

நடுரோட்டில் ஐஸ்வர்யா-யாஷிகா கொடுத்த முத்தம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதும், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் நெருக்கமான தோழிகளாகிவிட்டது தெரிந்ததே.

'96' படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்கள் தங்களுக்கு நடந்த நிகழ்வுகள்

இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்

'வெண்ணிலா கபடிக்குழு' மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் 'அழகர்சாமியின் குதிரை', 'பாயும் புலி' 'பாண்டிய நாடு', 'ஜீவா', 'உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன்

விக்ரமின் அடுத்த படத்தில் 'வேதாளம்' வில்லன்

தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'வேதாளம்' படத்தின் வில்லன்களில் ஒருவராக கபீர்சிங் நடித்திருப்பார் என்பது தெரிந்ததே.