ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,April 08 2019]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் ஒரு காமெடி ரொமான்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் டைட்டிலை ஹரிஷ்கல்யாண் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் 'தனுசு ராசி நேயர்களே'. இந்த படத்தை நடிகரும் இயக்குனருமான சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை கோகுலம் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ஜோசியத்தில் நம்பிக்கையுள்ள ஒரு இளைஞராக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும், ஜாலியான காமெடி படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கும் உங்கள் அன்பும், ஆதரவும் தேவை என்றும், ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 

More News

விஷாலின் 'அயோக்யா' ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ தகவல்

விஷால் நடித்து முடித்துள்ள 'அயோக்யா' திரைப்படம் ஏற்கனவே ஒருசில ரிலீஸ் தேதிகளை அறிவித்திருந்தபோதிலும் ஒருசில காரணங்களால் அந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போனது.

பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலையில் திடுக்கிடும் திருப்பம்

கடந்த ஒரு மாதமாக பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் நாட்டையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் கழுத்தறுபட்டு கொலை

சென்னை போட்டி முடிந்த பின்னர் 10 கிலோ குப்பை: சுரேஷ் ரெய்னாவின் டுவிட்

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி, பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ராகுல்காந்திக்கு எதிராக போட்டியிட்டவரின் வேட்புமனு நிராகரிப்பு!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே அமேதி தொகுதியில் போட்டியிடும் நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்து,

விஜயகாந்தை அடுத்து ரஜினியை சந்தித்த டி.ராஜேந்தர்!

பிரபல நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தனது மகன் குறளரசன் திருமண பத்திரிகையை சமீபத்தில் விஜயகாந்திடம் அளித்து திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த நிலையில்