எஸ்.பி.வேலுமணி வீட்டில் ஹார்ட் டிஸ்குகள், ஆவணங்கள் பறிமுதல்.....!

  • IndiaGlitz, [Tuesday,August 10 2021]

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 53க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இதில் ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி மீது எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர், கோவையில் 35 இடங்களிலும், சென்னையில் 15 இடங்களிலும், திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 1 இடத்திலும் இன்று காலை 6 மணி முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் வேலுமணியின் ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவரின் இல்லத்தின் முன்பு குவிந்துள்ளனர்.

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சரின் சகோதரரிடமும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். இதேபோல் சேப்பாக்கம் எம்.எல்.ஏ விடுதியையும் மற்றும் வேலுமணியின் அறையையும், 2 குழுக்களாக பிரித்து டிஎஸ்பி தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அவரின் வழக்கறிஞர்கள் விடுதிக்குள் நுழைய வேண்டும் என்று போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் 2014 முதல் 2018-க்கு இடையிலான காலகட்டத்தில், சென்னை மாநகராட்சியின் விதிகளுக்கு உட்படாமல், அவற்றை மீறி எஸ்பி. வேலுமணி டெண்டர் ஒதுக்கியதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில் எம்.எல்.ஏ விடுதியில் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இவரின் கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, வங்கி பரிவர்த்தனை குறித்த ஆவணங்கள், ஹார்ட்டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எஸ்.பி.வேலுமணியின் ஆடிட்டர் இல்லம், அபிராமிபுரத்தில் உள்ள நிலையில், அங்கும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
 

More News

வெறும் 3 வார்த்தைக்கு 400 கோடி சம்பளமா? பிரபல நடிகர் குறித்த ஆச்சர்யத் தகவல்!

சினிமா என்பதே ஒரு கற்பனைச் சித்திரம்தான். இப்படி இருக்கும்போது கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஹாலிவுட் சினிமாவிற்காக ஒரு முன்னணி நடிகர்

வேற லெவல் புதிய லுக்கில் தல அஜித்: வைரல் புகைப்படங்கள்!

தல அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் அஜித்தின் புதிய லுக் குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா? வைரலாகும் நயன் வீடியோ!

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என நயன்தாரா கூறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

வாங்கோ வாத்தியாரே நாமளும் ஊர சுத்தி வரலாம்: பதிலடி கொடுத்த வேம்புலி!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் குறித்த மீம்ஸ் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி

சமூக நீதி பேசிவிட்டு, தூய்மைப்பணியாளர்களுக்கு வஞ்சகம் செய்கிறது அரசு.....! சீமான் காட்டம்.....!

திமுக அரசு சமூக நீதியென்று பேசி அரசியல் செய்து ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் சமூகத்தில் விளிம்பில் உள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு வஞ்சகம் செய்து ஏமாற்றுகிறது