நான் வந்துட்டேன்னு சொல்லு: தமிழில் டுவீட் போட்ட பிரபல சிஎஸ்கே வீரர்

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட வந்துவிட்டால், தமிழ் ரசிகர்களின் பாசமழைக்கு பஞ்சமே இருக்காது என்பது தெரிந்ததே. இதற்கு நல்ல உதாரணம் தல தோனி

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் புதியதாக இடம்பிடித்திருப்பவர் பஞ்சாபை சேர்ந்த பிரபல சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங். சென்னை அணியில் இடம்பிடித்தவுடனே தமிழில் டுவீட் போட்டு ஏற்கனவே அசத்தியது தெரிந்ததே

இந்த நிலையில் ஹர்பஜன்சிங் 'சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி பட வசனமான நான் வந்துட்டேன்னு சொல்லு' என்ற வசனத்துடன் ஒரு அட்டகாசமான டுவீட்டை தமிழில் பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது:

நான் வந்துட்டேன்னு சொல்லு தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா. உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, வீரமா, காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே மெர்சலாகுது தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!

அனேகமாக இந்த ஐபிஎல் முடிவதற்குள் உண்மையான தமிழராக ஹர்பஜன் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

 

More News

முடிவுக்கு வந்தது ஜிவி பிரகாஷின் அடுத்த படம்

ஜிவி பிரகாஷ் நடித்து வந்த குப்பத்து ராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அவர் நடித்து வந்த 'சர்வம் தாள மையம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது

சென்னையில் தற்கொலைக்குக் முயன்ற இரண்டு காவலர்கள் கைது

நேற்று சென்னையில் டிஜிபி அலுவலகம் எதிரே ரகு, கணேஷ் ஆகிய இரண்டு ஆயுதப்படை காவலர்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்

ரஜினி பள்ளியில் மகளை படிக்க வைத்த கமல் டிரைவர்

கமல்ஹாசனிடம் சுமார் 12 வருடங்கள் டிரைவராக பணிபுரிந்த ஆனந்த் அளித்துள்ள பேட்டியில் கமல்ஹாசனின் குணம், கவுதமியிடம் அவர் காட்டிய அன்பு, தனக்கு செய்த உதவி உள்பட பல விஷயங்களை மனம் திறந்து கூறியுள்ளார்

சங்கத்தை மீறி படப்பிடிப்பு நடத்தும் விஜய்சேதுபதி! சலசலப்பில் தயாரிப்பாளர் சங்கம்

கோலிவுட் திரையுலகம் ஒட்டுமொத்தமாக இணைந்து புதிய படங்கள் வெளியீடு இல்லை, உள்ளூர், வெளியூர் படப்பிடிப்பு இல்லை, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இல்லை

தெலுங்கானாவை அடுத்து பெற்றோர்களுக்க்கு எச்சரிக்கை விடுத்த தமிழகம்

சமீபத்தில் தெலுங்கானாவில் ஒரு அதிரடி அறிவிப்பு வந்தது. 18 வயதுக்கு குறைவானவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டினால், அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் கைது செய்யப்படுவார்கள்