'நோட்டா' நாயகனுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் வாழ்த்து

  • IndiaGlitz, [Thursday,October 04 2018]

அர்ஜுன்ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான 'நோட்டா' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அதிரடி அரசியல் திரைப்படமான இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளதால் நாளை சென்னை உள்பட பல நகரங்களில் அதிகாலை காட்சி திரையிடப்படவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக 'நோட்டா' படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் விஜய் தேவரகொண்டா, கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் விமர்சனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வீடியோவை பார்த்த பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தனது சமூக வலைத்தளத்தில் 'நோட்டா' நாயகன் விஜய் தேவரகொண்டாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: வணக்கம் அர்ஜுன் ரெட்டி எப்பிடி இருக்கீங்க தம்பி இப்போ தான் வீடியோ பாத்தேன் உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து போய்ட்டேன் இந்த பேரு, புகழ் எல்லாம் தமிழ் மக்கள் குடுத்தது வாழ வைக்குற தெய்வம் உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துக்கள்' என்று தமிழில் டுவீட் செய்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றதில் இருந்தே ஹர்பஜன்சிங் பல டுவீட்டுக்களை தமிழில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ரஜினியின் 'பேட்ட' செகண்ட் லுக் இதுதான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தின் செகண்ட் லுக் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக வெளிவந்த அறிவிப்பு குறித்து சற்றுமுன் பார்த்தோம்

ரஜினியின் 'பேட்ட' படம் குறித்த முக்கிய அப்டேட்: கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு வாரணாசி அருகே தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

நாளை முதல் 'விஸ்வாசம்' திருவிழா ஆரம்பம்?

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில்

10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 3 பேருக்கு தூக்கு தண்டனை

தேனி அருகே 5ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த 10 வயது சிறுமியை மூன்று பேர் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கமல் வைத்த பார்ட்டியில் யாஷிகா-ஐஸ்வர்யா கலந்து கொள்ளாதது ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறுடன் முடிவடைந்து அதில் ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு பெற்றார் என்பது தெரிந்ததே. ஐஸ்வர்யாவுக்கு இரண்டாமிடமும் விஜயலட்சுமிக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது.