கார்த்தி பிறந்த நாள். சிறப்பு கட்டுரை

  • IndiaGlitz, [Wednesday,May 25 2016]

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமார் என்பது கோலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் அறிவார்கள். அவரை போலவே அவருடைய இரண்டு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியும் தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகுமாரின் இளையமகனான கார்த்தி தனது 39வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை முதலில் தெரிவித்து கொள்கிறோம்.
மெக்கானிக்கல் பொறியாளர் மற்றும் எம்.பி.ஏ பட்டம் பெற்ற கார்த்தி, திரையுலகில் நுழைந்தது ஒரு உதவி இயக்குனராகத்தான். மணிரத்னம் இயக்கிய 'ஆய்த எழுத்து' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கார்த்தி அதன் பின்னர் தந்தையின் விருப்பத்திற்கிணங்க அமீரின் 'பருத்திவீரன்' படத்தில் நாயகனாக அறிமுகமானார். ஒரு அறிமுக நடிகர் என்று தெரியாத அளவில் பல படங்கள் நடித்த அனுபவமுள்ள நடிப்பை அந்த படத்தில் அவர் வெளிப்படுத்தியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
'பருத்திவீரன்' கார்த்தி என்று சொல்லும் அளவுக்கு புகழ்பெற்ற இந்த படம் வசூல் அளவிலும் நல்ல வெற்றி பெற்றது. இதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படமான 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் பருத்திவீரன்' அளவுக்கு தமிழில் வசூல் செய்யவில்லை எனினும் தெலுங்கில் திருப்தியான வசூலை கொடுத்ததோடு கார்த்தியின் நடிப்பும் பேசப்பட்டது.
முதல் இரண்டு படங்களில் அழுக்கு நாயகனாக வலம் வந்த கார்த்தியை ஸ்டைலிஷான நாயகனாக மாற்றியவர் இயக்குனர் லிங்குசாமி. இவருடைய 'பையா' படத்தில் நடித்த கார்த்தி, இந்த படத்தின் மூலம் தான் ஒரு ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் நாயகன் என்பதை நிரூபித்தார். கார்த்தி-தமன்னாவின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆக அதன் பின்னர் மீண்டும் இந்த ஜோடி சிறுத்தை, தோழா படங்களிலும் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பையா'வுக்கு பின்னர் சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த 'நான் மகான் அல்ல' சுமாராக ஓடிய நிலையில் சிவாவின் இயக்கத்தில் வெளிவந்த 'சிறுத்தை' சூப்பர் ஹிட் ஆக கார்த்திக்கு என தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடம் கிடைத்தது.
ஆனால் 2012 மற்றும் 2013 ஆகிய இரண்டு ஆண்டுகளில் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி மற்றும் அலெக்ஸ்பாண்டியன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் கார்த்தியின் மார்க்கெட் இறங்குமாக இருந்தது. இந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'மெட்ராஸ்' படதின் வெற்றியின் மூலம் கார்த்தி விட்ட இடத்தை பிடித்தார்.
வடசென்னை தமிழில் 'காளி' என்ற கேரக்டரில் கார்த்தியின் நடிப்பு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. காதல், ஆக்ஷன், நண்பனுக்காக எதையும் செய்யும் தன்மை என கார்த்தி இந்த படத்தின் மூலம் தனது நடிப்பை மெருகேற்றினார் என்பதே குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கிராமத்து கேரக்டரில் 'கொம்பன்' படத்தில் கார்த்தி நடித்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆகி கார்த்தியின் மார்க்கெட்டை உயர்த்தியது. அதன்பின்னர் நாகார்ஜூனனுடன் கார்த்தி நடித்த 'தோழா' உலகம் முழுவதும் நல்ல வசூலை கொடுத்தது.
இயல்பாகவே பொதுத்தொண்டு செய்யும் குடும்பத்தில் இருந்து வந்த கார்த்திக்கு அந்த சேவை மனப்பான்மை இல்லாமல் இருக்குமா? நலிந்த நடிகர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அவருடைய நல்ல மனது அவரை நடிகர் சங்க தேர்தலில் நிற்க வைத்தது. இந்த தேர்தலில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி 1493 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆர். கண்ணன் அவர்களை 413 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கார்த்தியின் எம்.பி.ஏ படிப்பு, மற்றும் தொண்டு செய்யும் மனப்பான்மை ஆகியவற்றால் நடிகர் சங்கத்தில் அவருடைய நிர்வாகம் சிறப்பாக நடந்து வருகிறது. நலிந்த நடிகர்கள் தற்போது நலமுடன் வாழ கார்த்தியும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 'காஷ்மோரா' படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். உதவி இயக்குனராக பணி புரிந்த மணிரத்னத்தின் நாயகனாக மாறியுள்ள கார்த்தி இந்த படத்தின் மூலம் அடுத்த நிலையை அடைவார் என இந்த பிறந்த நாளில் அவருக்கு நமது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

More News

சன்னி லியோனிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்

பாலிவுட்டின் கவர்ச்சி நாயகி சன்னிலியோன் அவ்வப்போது வித்தியாசமான கெட்டப்பை சோதனை செய்து பார்ப்பது வழக்கம்...

நயன்தாரா தயாரிப்பாளர் ஆவது உண்மையா? அவரே அளித்த விளக்கம் இதோ...

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்தயாரிப்பில் இறங்கவுள்ளதாகவும், அவர் தயாரிக்கும் முதல் படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்...

ஒரே தயாரிப்பாளருக்கு

'அச்சம் என்பது மடமையடா' படத்தின் முக்கிய தேதிகள்

சிம்பு, மஞ்சிமாமோகன் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள...

'ஒருநாள் கூத்து' ரிலீஸ் தேதி

அட்டக்கத்தி' படத்தில் அறிமுகமாகி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் தினேஷ் நாயகனாக...