தென்னிந்திய நடிகை என்பதால் இதெல்லாம் நடந்தது? மனம் திறந்த நடிகை ஹன்சிகா மோத்வானி!

  • IndiaGlitz, [Monday,June 12 2023]

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஹன்சிகா மோத்வானி தனக்கு பாலிவுட் வட்டாரத்தில் நடந்த புறக்கணிப்பு குறித்து மனம் திறந்துள்ளார். அவரது கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றிருக்கிறது.

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் ‘தேசமுருடு’ எனும் திரைப்படம் மூலம் 2007 இல் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் இணைந்து ‘வேலாயுதம்’, நடிகர் ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா என்று பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என்று 50 க்கும் மேற்பட்ட தென்னிந்திய சினிமாக்களில் நடித்த இவர் தனது நண்பரான சோஹேல் கதுரி என்பவரை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். ராஜஸ்தானில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா தான் தென்னிந்திய படங்களில் பணிபுரிந்து வந்ததால் வடிவமைப்பாளர்கள் தனக்கு ஆடை வழங்க மறுத்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

குல்டே.காம் எனும் தளத்திற்கு அளித்த பேட்டியொன்றில் தென்னிந்திய படங்களில் நடித்து வந்ததால் டிசைனர்கள் ஆடைகளை வழங்க முன்வரவில்லை. அனால் தற்போது என்னுடைய படங்கள் வெளியான பிறகு டிரெய்லர் வெளியீட்டு விழா இருக்கிறது. நீங்கள் ஏன் எங்களுடைய ஆடைகளை அணியக்கூடாது என்று கேட்கின்றனர். நானும் ஒப்புக்கொள்கிறேன். அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? என்று தனது பெருந்தன்மையைக் காட்டியுள்ளார்.

மேலும் நான் இந்திய சினிமாவில் வேலை செய்கிறேன். நான் ஒரு இந்திய நடிகை. இதை நான் எப்போதும் கூறுவேன் என்று பதிலளித்துள்ளார். நடிகை ஹன்சிகாவிற்கு நடந்த புறக்கணிப்பு குறித்த இந்தத் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.

More News

முதல்முறையாக மகள், மகன் புகைப்படத்தை வெளியிட்ட ஊர்வசி.. ரசிகர்கள் வாழ்த்து..!

தமிழ் சினிமாவில் கடந்த 80 கள் மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஊர்வசி தனது மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை முதல் முதலாக தனது சமூக வலைதளத்தில்

2வது முறையாக கர்ப்பமான தமிழ் நடிகரின் மனைவி.. ரசிகர்கள் வாழ்த்து..!

 பிரபல தமிழ் நடிகருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அவரது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளதையடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் இணையும் 'ராட்சசன்' கூட்டணி.. உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்..!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த த்ரில் கதை அம்சமுள்ள படங்களில் ஒன்று 'ராட்சசன்' என்பதும் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

திருமணத்திற்கு பிறகு ஸ்லிம் பியூட்டியான நடிகை மஞ்சிமா மோகன்… வைரல் புகைப்படம்!

நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை மஞ்சிமா மோகன்

என்னுடைய கணவர் இசையில் என்னை கவனம் செலுத்தவிடவில்லை - வைக்கோம் விஜயலட்சுமி

பிரபல பாடகி வைக்கோம்  விஜயலட்சுமி தன்னுடைய விவாகரத்து குறித்து நமக்கு அளித்த நேர்காணலில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார் .