நடிகை ஹன்சிகா மீது பகீர் புகார்

  • IndiaGlitz, [Tuesday,March 13 2018]

ஜெயம் ரவி நடித்த 'என்றென்றும் காதல்' என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னார் விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், சிம்பு, பிரபுதேவா, தனுஷ், உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சித்தார்த், என தமிழில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஹன்சிகா

தற்போது அவர் மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் ‘துப்பாக்கி முனை’ என்ற படத்திலும் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹன்சிகா மீது அவரது மேனேஜர் முனுசாமி என்பவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பகீர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், இதுவரை தான் பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா வழங்கவில்லை என்றும், அதைப் பெற்றுத் தரும்படியும் முனுசாமி கூறியுள்ளார். ஆனால் ஹன்சிகாவின் கால்ஷீட், சம்பளம் உள்பட அனைத்து பணிகளையும் அவரது தாயாரே கவனித்து வருவதாகவும், ஹன்சிகாவுக்கு மேனேஜர் என்று யாரும் இல்லை என்றும் அவரது தரப்பு கூறியுள்ளதாக தெரிகிறது.

 

More News

10வது மாடியில் விஐபிக்கள், பரதேசி போல் நடுரோட்டில் பாதுகாப்புக்கு வந்த காவலர்கள்

கடந்த சில நாட்களாகவே காவல்துறையை சேர்ந்தவர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்து அனைவரையும் அதிர்ச்சி அளித்து வருகிறது.

விக்ரம் மகனுடன் மகள் நடிப்பது உண்மையா? கவுதமி விளக்கம்

சீயான் விக்ரம் மகன் துருவ், இயக்குனர் பாலா இயக்கி வரும் 'வர்மா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கமல் கட்சியில் இணைகிறாரா தமிழிசை?

நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

ஆதார் எண்ணை இணைக்க புதிய காலக்கெடு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்ட ஆதார் எண்ணை, வங்கி எண், மொபைல் எண் உள்பட பல்வேறு ஆவணங்களில் இணைக்க மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தன.

திரையுலக செண்டிமெண்டுக்களை அடித்து நொறுக்கிய சூர்யா-கார்த்தி

திரையுலகம் மட்டுமின்றி பொதுவாக அனைத்து துறையினர்களும் ஒரு புதிய காரியத்தை தொடங்கும்போது செவ்வாய்க்கிழமை தொடங்குவதை பெரும்பாலும் தவிர்த்து விடுவார்கள்