ஐந்தாவது முறையாக சுந்தர் சி படத்தில் பிரபல நடிகை

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]

பிரபல இயக்குன சுந்தர் சியின் கனவுப்படங்களில் ஒன்றான 'சங்கமித்ரா' படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் ஹன்சிகா இன்னொரு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'அரண்மனை', 'அரண்மனை 2', 'ஆம்பள' ஆகிய படங்களில் நடித்துள்ள ஹன்சிகா ஐந்தாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார்.

மேலும் ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் 'புலி' படத்திற்கு பின்னர் மீண்டும் ஒரே படத்தில் நடிக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.

More News

வெல்வது யார்? மக்களின் மந்திரமா? சொக்கனின் தந்திரமா? கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் சமீபத்திய சமூக வலைத்தள பதிவுகள் அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களாலும் வரவேற்கப்பட்டு வருகிறது.

தனுஷ் படத்தில் ஒரே ஒரு வினாடி மட்டுமே நடித்த பிரபல நடிகர்

தனுஷ் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து கொண்டும், 'பவர் பாண்டி' என்ற படத்தை இயக்கியும் வருகிறார்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷால் உதவி

நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால், அவ்வப்போது நலிந்த நடிகர்களுக்கும், பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கும் தனது தேவி அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருவதை அவ்வப்போது பார்த்துள்ளோம்.

சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியில் உள்ள மைத்ரேயன் எம்பி தலைமையில் தேர்தல் ஆணையத்திடம் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கூவத்தூர் எம்.எல்.ஏக்கள் சொல்லி கொடுத்ததை சரியாக சொல்கிறார்கள். பார்த்திபன்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் ஆதரவு என கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களில் ஒருசிலர் தொலைக்காட்சியில் பேட்டி அளித்து வருகின்றனர்.