இந்தியாவில் பரவும் புதிய தொற்றுநோய்… மனிதர்களுக்கும் பாதிப்பா??

  • IndiaGlitz, [Saturday,January 02 2021]

 

கொரோனா பரவலே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இந்தியாவில் புதிய தொற்று நோய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இப்புதிய தொற்று நோயால் இதுவரை 50 க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து உள்ளன. மேலும் இத்தொற்று நோய் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டு இருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் பல காகங்கள் உயிரிழந்தன. டேலி எனப்படும் கல்லூரி வளாகத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிந்த நிலையில் இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை ஆய்விற்கு எடுத்துக் கொண்டது. அந்தப் பரிசோதனையில் காகங்கள் புதிய தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, அதனால் உயிரிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

H5N8 எனப்படும் பறவைக் காயச்சல் நோயால் பாதிக்கப்பட்ட காகங்கள் பின்னர் மொத்தமாக உயிரிழந்து உள்ளன. இதனால் அந்தக் கல்லூரி வளாகத்தை ஒட்டி சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மனிதர்களுக்கு ஏதேனும் சளி, காய்ச்சல் அறிகுறி தென்படுகிறதா எனக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சில மாதிரிகள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் அதை போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கொரோனாவின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள இந்தூரியில் புதிய வகை பறவைக் காய்ச்சல் மேலும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

More News

தட்டி கேட்க போகிறாராம் கமல்: பொறுத்திருந்து பார்ப்போம்!

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியின் ஆத்திரம் அளவுக்கு அதிகமாக அதிகரித்துக் கொண்டே செல்வதும், ஆரி  மற்றும் பாலாஜி இடையே தொடர்ச்சியாக மோதல் வந்து கொண்டிருக்கும் காட்சிகளையும் கடந்த இரண்டு நாட்களாக

வீடியோ: மக்களின் ஆதரவு ஆரிக்கு என்பதை வெளிப்படையாக பேசிய ஹவுஸ்மேட்ஸ்!

நடைபெற்று முடிந்த லக்சரி டாஸ்க்கான ப்ரீஸ் டாஸ்க்கின் போது ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர் என்பதும், அப்போது உறவினர்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒரே நபர் ஆரி தான்

இபிஎஸ் தலைமையிலான அதிமுக அரசின் சாதனைப் பட்டியல்… அனைத்துத் துறைகளிலும் முதலிடம்!!!

கொரோனா காலத்திலும் பல்வேறு சிக்கல்களை கடந்து தமிழக அரசு வெற்றிகரமான ஆட்சியை நடத்தி வருகிறது.

கொரோனாவை குணப்படுத்தும் எறும்பு? ஆய்வுக்கு பரிந்துரைக்கும் நீதிமன்றம்!!!

ஒடிசா, சடீஷ்கர் மாநிலங்களில் உள்ள மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இன மக்கள் பழங்காலம் தொட்டு ஒரு வகையான சிவப்பு எறும்பை உணவாக உட்கொண்டு வருகின்றனர்.

சிக்கலில் மாட்டிய ரிலையன்ஸ்… முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதமா?

முறைகேடாக நடைபெற்ற பங்கு வர்த்தகம் தொடர்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல்