65 வயது வரை பணம் சம்பாதித்த பால்கனி பையன்: கமல்ஹாசனை கலாய்த்த எச்.ராஜா

  • IndiaGlitz, [Saturday,April 18 2020]

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசை ‘பால்கனி அரசு’ என விமர்சனம் செய்தார். பால்கனியில் உள்ள அனைவரும் தரையில் உள்ளவர்களை கவனிப்பது இல்லை. முதலில் டெல்லி, இப்போது மும்பை. புலம்பெயர்ந்தோர் நெருக்கடி என்பது வெடிகுண்டு மாதிரி. அது கொரோனாவை விட பெரிய ஆபத்தானது. அந்த நெருக்கடி விபரீதமாக மாறும் முன்பு அதைத் தடுக்க வேண்டும். பால்கனி அரசாங்கம் தரையில் என்ன நடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’என்று கமல்ஹாசன் கூறியிருந்தார்.

கமல்ஹாசனின் இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது 4 நாட்கள் கழித்து இந்த விமர்சனத்திற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

பால்கனி அரசு? இந்த அரசு 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் ஒரு பால்கனி பையன், தனது 65 ஆண்டு வரை பிஸியாக பணம் சம்பாதித்துவிட்டு தற்போது திடீரென ஏழை மக்களுக்காக ரூ.1.7 லட்சம் கோடி வழங்கிய அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சாட்டுகிறார். வெட்கம்’ என்று கூறியுள்ளார்.

More News

யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய சென்னை ஐடி ஊழியர்கள் கைது!

கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

சீனா இனி தேவையில்லை: கொரோனா பரிசோதனை கருவிகளை கண்டுபிடித்தது கேரளா

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்ய உதவும் ரேபிட்கிட் என்ற கருவிகளை சீனாவில் இருந்துதான் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது என்பதும்,

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 540 பாசிட்டிவ்கள்: மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.

100 டன் மருந்து மாத்திரைகள் டெலிவரி: தபால் ஊழியர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை இருக்கும்

அஜித், விஜய்க்கு ஆபத்து இல்லை, ஆனால் அவமானம்: பிரபல நடிகை டுவீட்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் மனித இனமே உச்சத்தில் உள்ளது. சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்பு