ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய முயற்சியில் நிதி திரட்டும் ஜி.வி.பிரகாஷ்

  • IndiaGlitz, [Tuesday,December 19 2017]

நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் எந்த ஒரு சமூக பிரச்சனைகளுக்கும் திரையுலகில் இருந்து முதல் ஆளாக குரல் கொடுக்கும் நபராக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. ஜல்லிக்கட்டு முதல் நெடுவாசல் வரை அனைத்து சமூக போராட்டங்களுக்கும் ஆதரவு அளித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது சமீபத்தில் ஏற்பட்ட ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் புதிய முயற்சி ஒன்றை கையிலெடுத்துள்ளார்

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட ஐநூறு மீனவர்கள் மற்றும் விவசாய மக்களுக்கு உதவுவதற்காக முதன்முதலில் கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டும் புதிய முயற்சியை ஜி.வி. பிரகாஷ்குமார் தொடங்கிவைத்துள்ளார்.

எதுதர்மா (Edudharma) என்ற பெயரில் இயங்கும் வலைதள முகவரி மூலமாக இந்த நிதி திரட்டுப்பட்டு வருகிறது. இது குறித்து ஜீ வி பிரகாஷ்குமாரின் நண்பரும் சமூக சேவகருமான குணசேகரன் பேசும் போது,‘ தமிழகத்தின் தென் பகுதியை அண்மையில் வீசிய ஓகி புயலால் தமிழகத்தின் தென்கடலோரப்பகுதிகள் முழுவதும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களும், விவசாயப் பெருமக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவுவதற்காக உடனடியாக நடிகர் ஜீ வி பிரகாஷ்குமார் களத்தில் இறங்கினார். அப்போது குடும்ப உறுப்பினர்களை முழுவதுமாக இழந்து தனியாளாக ஆதரவற்று நின்ற சின்னத்துறையைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண்மணிக்கு தன்னாலான உதவிகளை செய்தார்.

அப்போது அங்குள்ளவர்கள் எங்களுக்கும் ஜீ வி பிரகாஷ்குமார் ஏதேனும் உதவி செய்யமாட்டாரா? என ஏக்கத்துடன் கேட்டனர். அதற்காகவும், கல்வி மற்றும் உடல் நலம் குறித்த திட்டங்களுக்காகவும் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த தகவலை எங்களுடைய உறுப்பினர்கள் மூலம் சேகரித்து, அதில் முதலில் ஐநூறு பேருக்கு கிரௌட் பண்ட் என்ற உத்தி மூலம் நிதி திரட்டி ஆதரிக்க எண்ணினோம். இந்த திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டதுடன், தன்னுடைய பங்களிப்பாக ஒரு சிறிய தொகையைக்  கொடுத்து இந்த கிரௌட் பண்ட் நிதி திரட்டும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் 

ஜீ வி பிரகாஷ்குமார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகை சாமான்கள் வாங்குவதற்காக மாதத்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்குவது என்று தொகை நிர்ணயித்து பதினைந்து லட்ச ரூபாயை இந்த கிரௌட் பண்ட் மூலம் திரட்ட திட்டமிட்டு தொடங்கியிருக்கிறோம். நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள் இந்த இணையப்பக்கத்தினை தொடர்பு கொண்டு அளிக்கலாம்.’ என்றார்.

ஜீ வி பிரகாஷ்குமார் ஏற்கனவே இந்த எதுதர்மா என்ற அறக்கட்டளை மூலம் கதிரவன் என்ற தடகள வீரர் பயிற்சியை மேற்கொள்வதற்கு தேவையான நிதி உதவியான ஒரு லட்சத்தை வழங்கியிருக்கிறார் என்பதும், கள்ளக்குறிச்சி என்ற ஊரில் உள்ள அரசு பள்ளிக்கு கழிப்பறை ஒன்றைக் கட்டிக் கொடுக்க நிதி உதவி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை தவிர்த்து ஜீ வி பிரகாஷ்குமார், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் என்ற ஊரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் பள்ளிக்கு இரண்டரை லட்ச ரூபாய் செலவில் கழிப்பறை ஒன்றை கட்டிக் கொடுக்க நிதி உதவி வழங்கியிருக்கிறார் என்பதும், மருத்துவ படிப்பை இடை நிறுத்தம் செய்யவேண்டிய சூழலில் இருந்த மருத்துவ மாணவி சுகன்யா, தன்னுடைய மருத்துவ படிப்பைத் தொடர்வதற்கு தேவையான நிதி உதவியை அளித்திருக்கிறார் என்பதும் எல்லோரும் அறிந்ததே.

ஜீவி பிரகாஷ்குமாரின் இந்த சமூக அக்கறை தொடரவேண்டும் என்பதே அவருடைய ரசிகர்களின் விருப்பம்.

More News

வெற்றியை கொண்டாடிய அருவி -சென்னை 2 சிங்கப்பூர் டீம்

இந்த ஆண்டில் பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஸ்டார்களின் படங்களின் வெற்றிகளே சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்டு கொண்டிருந்த நிலையில், எந்தவித பரபரப்பும் இன்றி, பெரிய எதிர்பார்ப்புகளும் இன்றி வெளியான

உதயநிதி படத்திற்கு கமல்ஹாசன் பட பாடலின் டைட்டில்

பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்று வெளியான செய்தியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பார்த்தோம்.

விக்ரம், சூர்யாவுடன் இணைந்தார் அரவிந்தசாமி

வரும் பொங்கல் தினத்தில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் சீயான் விக்ரமின் 'ஸ்கெட்ச்' ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளது. மேலும் சண்முகப்பாண்டியனின் 'மதுரவீரன்' படமும்

சச்சினிடம் வாழ்த்து பெற்ற இரண்டு பெண்கள் யார் தெரியுமா?

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்பட்டு வரும் சச்சின் தெண்டுல்கர், திறமை யாரிடம் இருந்தாலும் அதை பாராட்ட தயங்காதவர். குறிப்பாக பெண்கள் சாதனை செய்யும் போது

எத்தனை முறை கேட்டாலும் அஜித்தான் எனக்கு பிடித்த நடிகர்: ப்ரியா பவானிசங்கர்

'மேயாத மான்' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ப்ரியா பவானிசங்கர். இந்த படத்தின் வெற்றியால் தற்போது இவர் கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் படத்தில் நாயகியாக