தடையை தவிடுபொடியாக்கி நாளை வெளியாகிறது 'கடவுள் இருக்கான் குமாரு'

  • IndiaGlitz, [Wednesday,November 09 2016]

ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி நடித்த 'கடவுள் இருக்குறான் குமாரு' திரைப்படத்தின் ரிலீசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த படத்தை வெளியிட எவ்வித தடையும் இல்லை என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் காரணமாக நாளை திட்டமிட்டபடி இந்த படம் வெளியாகவுள்ளது.
'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தை சேலம் பகுதியில் வெளியிடும் ஜி.சிவா என்பவர் தனக்கு தர வேண்டிய பாக்கி பணத்திற்காக இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 'சேலம் சிவா ரூ 35 லட்சத்தை வைப்புத் தொகையாகச் செலுத்திவிட்டு இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம் என்றும், இந்த வழக்கு படத்தின் தயாரிப்பாளர் டி சிவாவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்றும், கடவுள் இருக்கான் குமாரு' படத்தை வெளியிடத் தடை ஏதுமில்லை என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை அடுத்து இந்த படம் திட்டமிட்டபடி நாளை உலகம் முழுவதும் வெளியாவது உறுதி என்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா கூறியுள்ளார்,.