நாகசைதன்யாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கவுதம் மேனன்

  • IndiaGlitz, [Tuesday,August 23 2016]

ஒரு ஹீரோ நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது என்பது ஒரு இக்கட்டான நிலை. இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கும் என்பதால் பல ஹீரோக்கள் இதை தவிர்ப்பது உண்டு. இப்படி ஒரு நிலை நாகசைதன்யாவுக்கு வந்திருந்த நிலையில் தனது அன்பான வேண்டுகோளால் நாக சைதன்யா அதை தவிர்த்துள்ளார்.
நாகசைதன்யா நடித்து முடித்துள்ள 'பிரேமம்' மற்றும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் தெலுங்கு பதிப்பான 'Sahasam Swasaga Saagipo' ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் 'பிரேமம்' படம் வரும் செப்டம்பர் 9 இல் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர்.
ஆனால் அதே தேதியில் இயக்குனர் கவுதம் மேனனும், Sahasam Swasaga Saagipo' படம் ரிலீஸ் என தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். இந்நிலையில் கவுதம்மேனனிடம் 'Sahasam Swasaga Saagipo' படத்தை அக்டோபருக்கு தள்ளி வைக்குமாறும், அந்த தேதியில் பிரேமம்' ரிலீஸ் ஆகவுள்ளதையும் நாக சைதன்யா எடுத்து கூறியபோது, அவருடைய கருத்தில் இருந்த நியாயத்தை புரிந்து கொண்ட கவுதம் மேனன் இப்படத்தை அக்டோபருக்கு ஒத்தி வைத்துள்ளார். தான் நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நாகசைதன்யா விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயம்தான்.

More News

மதுரைக்கு சிம்பு, காஞ்சிக்கு டி.ஆர்

தமிழக பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இதில் கலந்து கொள்ளவுள்ள எட்டு அணிகளின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...

2.0-வுக்கு முன்பு ரிலீஸ் ஆகும் ரஜினி படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்...

'ரெமோ' தயாரிப்பாளரின் புத்திசாலித்தனமான ஐடியா

தமிழ் திரையுலகினர்களுக்கு சவால் கொடுக்கும் ஒரே விஷயம் திருட்டு டிவிடி என்னும் அரக்கர்கள்தான். என்னதான் சட்டங்கள் போட்டு விழிப்புடன் இருந்தாலும்...

பூஜை போட்ட அன்றே வியாபாரம் ஆன உதயநிதி திரைப்படம்

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த 'மனிதன்' திரைப்படமும், எழில் இயக்கிய 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படமும் வணிக ரீதியாக வெற்றி பெற்றதோடு ...

அஜித் பாணியில் விஜய்சேதுபதி

வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வரும் விஜய்சேதுபதி நடித்த 'தர்மதுரை' படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...