1000 ரூபாய் கேட்ட ரசிகருக்கு 1500 ரூபாய் அனுப்பிய ஜிவி பிரகாஷ்.. ரசிகரின் ரியாக்சன்..!

  • IndiaGlitz, [Thursday,October 10 2024]

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷிடம், ரசிகர் ஒருவர் சமூக வலைதளம் மூலம் அவசரமாக 1000 ரூபாய் கடன் கேட்ட நிலையில், ஜி.வி. பிரகாஷ் அந்த ரசிகருக்கு 1500 ரூபாய் அனுப்பி உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருந்து வரும் ஜி.வி. பிரகாஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் ஜி.வி. பிரகாஷின் ட்விட்டர் ஐடியை டேக் செய்து, தனக்கு மிகவும் அவசரமாக 1000 ரூபாய் தேவைப்படுகிறது.

நீங்கள் கொடுத்து உதவி செய்தால், நாளை திருப்பிக் கொடுத்து விடுவேன் என்று கூறியிருந்தார். இந்த ட்விட்டை பார்த்த அடுத்த நான்கு நிமிடங்களில், ஜி.வி. பிரகாஷ் அந்த ரசிகருக்கு 1500 ரூபாய் அனுப்பியுள்ளார்.

இதனை அடுத்து, நன்றி கூறிய அந்த ரசிகர் மறுநாளே அந்த பணத்தை திருப்பி அனுப்பி, அவசர நேரத்தில் உதவி செய்ததற்கு மிகவும் நன்றி. இந்த உதவியை மறக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இது குறித்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்த நிலையில், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் செய்த இந்த உதவி குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

10 ஆயிரம் கொடுத்தால் 50 ஆயிரம்.. ஐபோன் இலவசம்.. பாடகி சித்ரா அதிர்ச்சி..!

10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 50 ஆயிரம் ரூபாய்  கிடைக்கும் என்றும் ஐபோன் இலவசம் என்றும் பாடகி சித்ரா பெயரில் மோசடியான விளம்பரம் வெளியானதை அடுத்து அவர்

பாடகி சின்மயி வீட்டிற்கு வந்த சமந்தா.. அடிப்பாவி என புலம்பிய கணவர்..!

பாடகி சின்மயி வீட்டிற்கு நடிகை சமந்தா வந்த நிலையில், அவrஐ பார்த்து  சின்மயி கணவர் அடிப்பாவி என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எஸ்.வி.சேகர் வீட்டில் பிரமாண்ட கொலு! நூறு வருட பழமையான பொம்மைகளின் அழகு

நடிகர் எஸ்.வி.சேகர் அவர்களின் வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட கொலுவை ஆன்மீக கிளிட்ஸ் சேனலில் காணலாம்.

சமந்தா ஒரு பான் இந்திய சூப்பர் ஸ்டார்.. அவருடன் ஒரு படத்தில் நடிப்பேன்: பிரபல பாலிவுட் நடிகை..!

சமந்தா ஒரு பான் இந்திய நடிகை என்றும், அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்றும் பிரபல பாலிவுட் நடிகை சமீபத்தில் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

உரிமை கேட்டு போராடுபவர்களை கைது செய்வதா? இயக்குனர் பா ரஞ்சித் கண்டனம்..!

தங்கள் உரிமையை கேட்டு போராடும் தொழிலாளர்களை போராட விடு என இயக்குனர் பா. ரஞ்சித் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.