ஜனவரி முடிந்தால் ஓடிப்போக மாட்டேன். ஜி.வி.பிரகாஷ்குமார்

  • IndiaGlitz, [Monday,January 16 2017]

ஜல்லிக்கட்டு பிரச்சனைக்காக ஒவ்வொரு ஜனவரி மாதமும் போராடும் அமைப்பினர் ஜனவரி முடிந்தவுடன் காணாமல் போய்விடுவதாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஒருசிலர் கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கூறிய பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், 'ஜனவரி முடிந்தால் ஓடிப்போய்விடுவார்கள்' என்று கூறுவது தவறு. ஜனவரி மட்டுமல்ல வாழ்க்கை முழுவதும் என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே இருப்பேன். நான் மட்டுமல்ல எனது நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரும் உதவிகளை செய்வார்கள்

மேலும் நாளை காலை 6.30 மணிக்கு சேலம் ஆத்தூர் பகுதியில் நடைபெறும் ஏறு தழுவுதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கின்றேன். களத்தில் சந்திப்போம்' என்று ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.