ஜிவி பிரகாஷின் அடுத்தடுத்த 3 ரிலீஸ்!

  • IndiaGlitz, [Saturday,October 05 2019]

நேற்று வெளியான தனுஷின் ’அசுரன்’ திரைப்படத்தில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பலராலும் பாராட்டப்பட்ட நிலையில், அடுத்த கட்டமாக ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவர உள்ள படங்கள் குறித்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

அசுரனை அடுத்து ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்த ’ஜெயில்’ படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளதாகவும், இந்த படத்தை தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய வசந்தபாலன் இயக்கி உள்ளார் என்றும் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து சூர்யாவின் ’சூரரைப்போற்று’ படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளதாகவும், இது தான் இசையமைக்கும் 70ஆவது படத்தின் ஆல்பம் என்றும் ஜிவி பிரகாஷ் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த இரண்டு படங்களை அடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற திரைப்படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளது என்பதையும் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்க ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத்தும், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமியும் நடிக்க உள்ளனர்ர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரகாஷின் அடுத்தடுத்த மூன்று ஆல்பங்கள் ரசிகர்களை திருப்தி அடையச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நிகழ்ச்சி முடிவடையும் நேரத்திலும் வனிதாவை கலாய்க்கும் சாண்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்றும் நாளையும் நடைபெறவிருக்கும் நிலையில் தற்போது முகின், லாஸ்லியா, சாண்டி மற்றும் முகின் ஆகிய நால்வர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

இது டிரைலர்தான் மெயின் பிக்சர் இனிமேல்தான்: மதுமிதா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா, திடீரென தன்னைத்தானே காயப்படுத்தி கொண்டதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பேனர் விவகாரம்: சூர்யா, தனுஷ் ரசிகர்களை மிஞ்சிய விஜய்சேதுபதி ரசிகர்கள்

பேனர் கலாச்சாரத்தால் சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ மரணம் அடைந்த நிலையில் இந்த மரணத்திற்கு பின் பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல்வாதிகளும், மாஸ் நடிகர்களும் அறிவித்தனர்.

புதிய லுக்குடன் அஜித் சென்றது எங்கே தெரியுமா?

நேற்று சென்னை விமான நிலையத்தில் தல அஜித்தை புதிய இளமையான தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து அவருடன் செல்பி எடுக்க முண்டியெடுத்தனர்.

மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு: பொங்கி எழும் திரையுலகினர்

மணிரத்னம் உள்பட 50 பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி கையெழுத்திட்ட விவகாரத்தில் அவர்கள் அனைவர் மீதும் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.