மீண்டும் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. என்ன சொல்கிறார்கள்?

  • IndiaGlitz, [Thursday,May 16 2024]

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிவதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தனர் என்பதும் இந்த அறிவிப்பு தமிழ் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தங்களது அறிவிப்பில் இது இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என்றும் இருவருடைய எதிர்காலத்தை கணக்கில் கொண்டு எடுத்த முடிவு என்றும் எங்களுடைய தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பளித்து ஊடகங்கள் மற்றும் நண்பர்கள் இதுகுறித்து விவாதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் ஜி வி பிரகாஷ் - சைந்தவி பிரிவு குறித்து சில ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் தங்கள் இஷ்டத்திற்கு ஏராளமான கதைகள் கூறின என்பதும் இவை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சைந்தவி கூறியதாவது:

யூடியூப் சேனல்களில் எங்களுடைய விவாகரத்து குறித்து கூறப்படும் கதைகளை பார்ப்பதற்கு வருத்தம் அளிக்கிறது. எங்களுடைய முடிவுக்கு மதிப்பளிக்க கோரிக்கை விடுத்தும் இதுபோன்று கதைகள் புனையப்படுவது வேதனையாக இருக்கிறது.

ஒருவரின் குணாதிசயத்தை எந்தவித ஆதாரமும் இல்லாமல் சிதைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இந்த முடிவு எங்கள் இருவரின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டது. நானும் ஜி.வி பிரகாஷ் குமாரும் பள்ளிப் பருவத்தில் இருந்து நண்பர்களாக இருந்துள்ளோம். 24 வருட நட்பு. அதே நட்புடன் இனியும் பயணிப்போம்’ என்று சைந்தவி கூறியுள்ளார்.

அதேபோல் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் ’ஏராளமான சேனல்கள் தங்களுடைய சொந்த கற்பனை திறனை வெளியே காட்டிக் கொள்வதற்காக உண்மை இல்லாததை தெரிவித்து வருகின்றன . ஒரு சிலர் எங்களது பிரிவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் வகையில் கற்பனை கதைகளை வெளியிட்டு வருகிறார்கள். இருப்பினும் இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு ஆதரவு அளித்த சிலருக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் இந்த இரண்டு பதிவுகளும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

More News

'த்ரிஷ்யம்' இயக்குனரின் அடுத்த படத்தில் அமலாபால்.. 4 மொழிகளில் ரிலீஸ்..!

மோகன்லால், மீனா நடித்த 'த்ரிஷ்யம்' படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் வெளியிடும் படத்தில் அமலாபால் நாயகியாக நடித்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு? கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பு..!

நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு ஆண்டும் சென்று வருகிறார் என்பது பலர் அறிந்தது. அந்த வகையில் இந்த ஆண்டும்

சீரியலில் மாமியார் - மருமகள்.. நிஜத்திலும் மாமியார் - மருமகள் ஆகும் ஆச்சரியம்..!

சீரியலில் மாமியார் மருமகள் கேரக்டரில் நடித்து கொண்டிருக்கும் இரண்டு நடிகைகள் நிஜமாகவே மாமியார் மருமகள் ஆகப்போகும் ஆச்சரியம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

அவரை போல் இன்னொருவர் இந்த உலகத்தில் தோன்ற முடியாது: ரஜினிகாந்த் வீடியோ வரைல்..!

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது என்பதும் டெல்லி சென்று அந்த விருதை அவருடைய மனைவி பிரேமலதா பெற்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

திடீரென வெளிநாட்டுக்கு கிளம்பிய ரஜினிகாந்த்.. எந்த நாடு? என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென வெளிநாட்டுக்கு கிளம்பி இருப்பதாகவும் அவர் எந்த நாட்டுக்கு சென்றார்? என்ன காரணத்துக்காக செல்கிறார்? என்ற விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.