72 வயதில் முதுகலைத் தேர்வு எழுதிய எம்.எல்.ஏ… வைரலாகும் தகவல்!!!

  • IndiaGlitz, [Tuesday,October 06 2020]

 

ஹரியாணாவைச் சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ ஒருவர் ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது முதுகலை பட்டத்திற்கான தேர்வை வெற்றிக்கரமாக எழுதி முடித்து இருக்கிறார். 72 வயதான எம்.எல்.ஏ ஈஸ்வர் சிங் தனது அரசியல், அறிவியல் பாடத்திற்கான முதுகலைத் தேர்வை எழுதியுள்ளார். இந்தத் தகவல் இணையத்தை கலக்கி வருகிறது.

ஜனாயக் ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் ஈஸ்வர் சிங். இவர் குலா சீக்கா தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். படிப்பின்மீது அலாதி ஆர்வம் கொண்ட இவர் அரசியலுக்கு வந்தப் பின்னரும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் குருஷேத்ரா பல்கலைக் கழகத்தில் அரசியல், அறிவியல் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பை தேர்வு செய்து படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் கிடைத்த நேரத்தை முறையாகப் பயன்படுத்திக் கொண்டு தற்போது தனித்தேர்வராக தனது தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்து இருக்கிறார்.

10 ஆம் வகுப்பு மட்டுமே முடித்திருந்த ஈஸ்வர் சிங் 1970 களில் அரசியல் மீது கவனத்தை செலுத்தத் தொடங்கினார். பின்னர் 1977 களில் முதல் முறையாகச் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதைத் தொடர்ந்து ஹரியாணா பள்ளிக் கல்வி வாரியத் தலைவராகவும் நியமிக்கப் பட்டிருக்கிறார். 10 ஆம் வகுப்பை மட்டுமே முடித்து இருந்தாலும் அவரால் அரசியலில் இருந்தபோது கல்விசார் கொள்ளைகளை மிகத் திறமையாக உருவாக்க முடிந்து இருக்கிறது. ஆனாலும் அரசியலைவிட கல்வி அவருக்கு பெரிய ஈர்ப்பாக இருந்திருக்கிறது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கல்வி பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து தனது 34 ஆவது வயதில் 12 ஆம் வகுப்பை நிறைவு செய்திருக்கிறார். பின்னர் 37 ஆவது வயதில் இளங்கலைப் பட்டத்தை பெற்றார். பின்னர் சிறிது காலம் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். அதைத்தொடர்ந்து வரலாறு, சட்டம் ஆகியத் துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்று மாநிலங்களவை எம்.பி.யாகவும் உயர்ந்து நின்றார்.

தற்போது கொரோனா காலத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என நினைத்த ஈஸ்வர் சிங் பல்கலைக் கழகத்தில் அரசியல், அறிவியல் துறையில் முதுகலைப் பட்டத்திற்காக விண்ணப்பித்து அதன் தேர்வையும் எழுதி இருக்கிறார். தன்னுடைய கல்வி அறிவை அரசியலில் பயன்படுத்த வேண்டும் என்பதில் ஈஸ்வர் தெளிவாக இருப்பதாகவும் கருத்துகள் வெளியாகி இருக்கிறது.

More News

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவிக்கு கத்திக்குத்து: மடக்கி பிடித்த பொதுமக்கள்!

குடும்ப சண்டை காரணமாக கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

நாளை பூமியின் வெளிப்புறச் சுற்றுப்பாதையை பதம் பார்க்க இருக்கும் சிறிய கோள்… பீதியைக் கிளப்பும் தகவல்!!!

பூமியின் வெளிப்புற சுற்று வட்டப் பாதையில் நாளை சிறிய கோள் ஒன்று மோத இருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

பிக்பாஸ் எத்தனை மணிக்கு? கேள்வி கேட்ட கமல், ரஜினி பட நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கப்பட்டு நேற்று முதல்நாள் நிகழ்ச்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன என்பதும் முதல் நாளே விறுவிறுப்பாக சென்றது என்பதும் தெரிந்ததே.

ஜேம்ஸ்பாண்ட் படத்தை அடுத்து மேலும் ஒரு ஹாலிவுட் பட ரிலீஸ் ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்ட அனைத்து பணிகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் இயக்கத்தில் நயன்தாரா? ஆச்சரிய தகவல் 

லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா, தனக்கு நல்ல கேரக்டர் கிடைத்தால் அறிமுக இயக்குனர்கள் மற்றும் அறிமுக நடிகர்களுடன் கூட நடிக்க தயங்க மாட்டார் என்பது தெரிந்ததே.