புதிய ரூபாய் நோட்டாக வரதட்சணை கொடுக்காததால் நின்று போன திருமணம்

  • IndiaGlitz, [Saturday,November 26 2016]

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் பலவித குழப்பங்கள் நாள்தோறும் நாடு முழுவதும் நடைபெற்று வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் மாப்பிள்ளை வீட்டார் பழைய ரூபாய் நோட்டுக்களை வரதட்சணையாக வாங்க மறுத்ததால் திருமணம் நின்றுபோன சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் என்ற நகரில் திருமணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக பழைய ரூபாய் நோட்டுக்களை புதிய ரூபாய் நோட்டுக்களக மாற்றி மணமகன் வீட்டாருக்கு தர வேண்டிய வரதட்சணை பணத்தை புரட்டுவதிலும், மணமகனுக்கு புதிய கார் வாங்கி கொடுப்பதிலும் மணமகள் வீட்டாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

புதிய நோட்டாக வரதட்சணை பணத்தை தராததாலும், புதுக்கார் வாங்கி தராததாலும், திருமணத்திற்கு முந்தைய நாள் மாப்பிள்ளை திடீரென திருமணத்தை நிறுத்திவிட்டார். இதனால் திருமணம் நின்று போன அதிர்ச்சியில் மீளமுடியாமல் மணமகள் வீட்டார்கள் உள்ளனர்.

More News

638 முறை கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிடல் காஸ்ட்ரோ

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், கியூபா மக்களின் அன்புக்குரியவரும், சேகுவாராவின் உயிர் தோழருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார்.

கே.பாக்யராஜூக்கு பார்த்திபன் நடத்தும் 'திரைபாக்கியம்' விழா

கே.பாக்யராஜின் உதவியாளராக இருந்த பார்த்திபன் தற்போது 'கோடிட்ட இடங்களை நிரப்புக' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், கம்யூனிஸ்ட் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார். அவருக்கு வயது 90

டண்டனக்காவை அடுத்து 'டமாலு டுமீலு'. அனிருத்தின் அடுத்த பாடல்

இளம் இசைப்புயல் அனிருத், இசையமைப்பது மட்டுமின்றி மற்ற இசையமைப்ப&

விஜய் பாடிய 'பைரவா' பாடல். சந்தோஷ் நாராயணன் தரும் முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இரவுபகலாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.