close
Choose your channels

சூரரை போற்று: அதிருப்தி அடைந்த நண்பர்களுக்கு ஜிஆர் கோபிநாத் விளக்கம்!

Friday, November 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகிய சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே இந்த படத்தை ஜிஆர் கோபிநாத் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டி இருந்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தனது நண்பர்கள் சிலர் இந்த படம் குறித்து அதிருப்தி தெரிவித்ததாகவும் அவர்களுக்காக இந்த விளக்கம் அளிப்பதாகவும் ஜிஆர் கோபிநாத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

சூரரைப் போற்று' திரைப்படம் எனது புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கையை உண்மையாகச் சொல்லவில்லை என எனது சில பள்ளி, ராணுவ நண்பர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது திரைப்படம் என்பதற்காக கற்பனை கலந்து எடுக்கப்பட்டிருக்கிறது, அந்த மசாலாவுக்குக் கீழ் நல்ல ஆழமுள்ள விஷயங்களும் உள்ளன என்று அவர்களிடம் விளக்கம் அளித்தேன். என் வாழ்க்கையில் நடந்ததை நடந்தபடியே சொல்லியிருந்தால் ஆவணப்படமாகியிருக்கும்

ஒரு ஹீரோ துணிச்சல் மிக்கவராகத் தெரியலாம். ஆனால் அவரும் பலவீனமானவர் தான். ஹீரோ தனது குடும்பத்திடமிருந்து, மனைவியிடமிருந்து உணர்ச்சி ரீதியில் ஆதரவு தேவை என்பதை இந்த படம் காட்டுகிறது. ஹீரோவின் குழுவில் இருப்பவர்கள் அவரைவிட அதிகமாகவே தியாகம் செய்கின்றனர். ஒரு மனைவியால் தனது கனவை விட்டுக் கொடுக்காமல் கணவரின் லட்சியத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும், தனது சொந்த அடையாளத்தையு இழக்காமல் கணவருக்கு ஆதரவு தருவதோடு அவன் சோர்வடையும் போது அவனுக்கு ஊக்கம் தர முடியும் என்பதை அபர்ணா மூலம் இயக்குனர் சுதா மிக அழகாக காட்டியிருக்கிறார்.

மேலும் இது, ஒவ்வொரு முறை வீழ்ந்த பின்பும் எழுச்சி பெறும் ஒருவரின் கதை. நான் தோல்வியைக் கண்டுவிட்டேன் ஆனால் நான் தோல்வி அடைந்தவன் அல்ல. நான் எப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்கிறேனோ அப்போதுதான் நான் தோற்றுப் போனவன் என ஒருவர் தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் கதை இது. ஒவ்வொரு முறை விழும் போதும் நான் எழுவேன். இது விடாப்பிடியாக இருப்பதைப் பற்றியது மட்டுமல்ல, நல்லவர்களும் நம்மைச் சுற்றி உள்ளனர், சூரியன் நம் வானத்தில் உதிக்கும், கதவுகள் திறக்கும் என்று நம்புவதும் தான். இதுதான் இந்தத் திரைப்படத்தின் உண்மையான செய்தி. அதை நம்பும்படி, அட்டகாசமாக சூர்யா நடித்துள்ளார். இவ்வாறு ஜிஆர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment