ஜிபி முத்துவை பிளேடினால் வெட்டிய நபர்.. 175 தையல் போட்டதால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Wednesday,November 30 2022]

பிக்பாஸ் போட்டியாளரான ஜிபி முத்துவை பிளேடினால் அவரது சகோதரர் வெட்டி விட்டதாகவும் அதனால் அவருக்கு 175 தையல் போட்டதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்து, டிக்டாக் பிரபலம் என்பதும், அவர் ஒரு சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து விட்டார் என்பது தெரிந்ததே. அவர் தனது மகனைப் பிரிந்து இருக்க முடியாது என்று பிக்பாஸ் இடம் அடம் பிடித்து வெளியே வெளியேறினார் என்பது குறிபிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் இருந்த ஒரு சில நாட்கள் கலகலப்பாக இருந்தது என்பதும் கமல்ஹாசனையே மிஞ்சும் அளவிற்கு அவரது காமெடி இருந்ததால் பார்வையாளர்கள் ரசித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ஜிபி முத்து தனக்கும் தனது சகோதரருக்கும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இடத்தில் சண்டை வந்ததாகவும் அந்த சண்டையில் தன்னை தன்னுடைய சகோதரர் பிளேடால் பல இடங்களில் வெட்டி விட்டார் என்றும் அதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்தேன் என்றும் கூறினார். அதன் பிறகு ஜிபி முத்துவின் நண்பர் தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்றியதாகவும் குறிப்பிட்டார்.

இருப்பினும் தன்னை வெட்டிய தம்பி இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு தான் துடி துடித்ததாகவும், தன்னை தம்பி வெட்டிய வலியை விட அவரை இழந்தது தான் எனக்கு மிகப்பெரிய வலியாக இருந்தது என்றும் அவருடைய குழந்தைகளை நான் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும் அந்த பேட்டியில் ஜிபி முத்து தெரிவித்தார்.

More News

எனக்கும் ரக்சிதாவுக்கும் இருக்கும் உறவுமுறை இதுதான்: ராபர்ட் மாஸ்டர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர் கடந்த ஞாயிறன்று குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் தனக்கும் ரக்சிதாவுக்கும் இருக்கும் உறவுமுறை கு

சினிமா என்பது கலை. வியாபராமல்ல: விஜயானந்த் பட நாயகன் நிஹால்!

சினிமா என்பது கலை, வியாபராமல்ல என விஜயானந்த் பட நாயகன் நிஹால் தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதியின் 'டிஎஸ்பி' உள்பட இந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்!

 ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தமிழ் திரையுலகில் குறைந்தபட்சம் நான்கு திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை 6 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு

'பொன்னியின் செல்வன்' வெற்றியால் தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை!

சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மட்டுமின்றி தமிழகத்திற்கு மிகப்பெரிய பெருமை

யுவன் செய்த காரியம்.. வருத்தத்தில் வெங்கட்பிரபு!

பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா செய்த காரியத்தால் இயக்குனர் வெங்கட் பிரபு வருத்தத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.