பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவுடன் ஜிபி முத்து வெளியிட்ட முதல் வீடியோ: என்ன சொல்லியிருக்கார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்து மிகச் சிறப்பாக விளையாடி கொண்டிருந்தார் என்பதும் அவரது பெயரில் ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டு அவருக்கு மிகச்சிறந்த ஆதரவை பார்வையாளர்கள் கொடுத்துக் கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக ஜிபி முத்து தேர்வான நிலையில் அவர் கண்டிப்பாக 100 நாட்கள் வரை அந்த நிகழ்ச்சியில் தாக்குப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென தனது மகனை பார்க்க முடியாமல் ஏங்கி வருத்தம் அடைந்த ஜிபி முத்து வீட்டுக்கு போயே தீரவேண்டும் என்று கூறினார். கமல்ஹாசன் மற்றும் பிக் பாஸ் எவ்வளவோ சமாதானப் படுத்தியும் தனக்கு எவ்வளவு பெயரும் புகழும் பணமும் கிடைத்தாலும் அது தேவை இல்லை என் மகன் தான் முக்கியம் என்று கூறி பிடிவாதமாக வெளியேறிவிட்டார்.

இந்த நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து தனது வீட்டில் தனது குழந்தைகளுடன் பிரியாணி சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தனது மகனுக்கு பிரியாணி ஊட்டிய அவர், என்னை பார்க்காமல் ஏங்கிப் போய்விட்டான் என்றும், மெலிந்து போய்விட்டான் என்றும் கூறுகிறார். அதன் பிறகு தனது மகளுக்கும் பிரியாணியை அவர் கொடுக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன என்பது குறித்து அவர் கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுகுறித்து அவர் எதுவுமே கூறவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒப்பந்தத்தின் கெடுபிடி காரணமாக அவர் எதுவும் கூறவில்லை என்று கூறப்படுகிறது.
 

More News

13 ஆண்டுகளுக்கு பின் பிகினி உடையில் அனுஷ்கா ஷெட்டி: திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

 திரையரங்கில் அனுஷ்கா ஷெட்டியை பிகினி உடையில் பார்த்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி கொண்டாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

இந்தியன் பனோரமாவில்  தேர்வான தமிழ்திரைப்படம்: குவியும் வாழ்த்துக்கள்!

உலகம் முழுக்க  புகழ்பெற்ற திரைப்பட விழாவாக  80 வருடங்களாக நடந்து வரும் கோவா  சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியன்  பனோராமா பிரிவில், ஜெய் பீம் படத்துடன் “கிடா” எனும் தமிழ் படமும்

யோகிபாபு வீட்டுக்கு வந்த தேவதை: திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து!

 பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு ஏற்கனவே ஆண் குழந்தை பிறந்த நிலையில் இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினி-கமல்: வீடியோ வைரல்!

இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் இன்று தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு

கோலார் தங்க வயல் கதைக்கள பின்னணியில் 'தங்கலான்': ரசிகர்களை கவர்ந்த காணொளி!

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'தங்கலான்' என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.