அரசு பள்ளியில் தான் படிப்பேன்: தனியார் பள்ளிகள் அழைத்தும் செல்லாத மாற்றுத்திறனாளி மாணவர்..!

  • IndiaGlitz, [Wednesday,June 28 2023]

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாற்றுத்திறனாளி மாணவரை தங்கள் பள்ளிக்கு தனியார் பள்ளிகள் அழைத்தும், தான் அரசு பள்ளியில் தான் படிப்பேன் என்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின் உதவியால்தான் நான் அதிக மதிப்பெண் பெற்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்தி வர்மா என்ற என்பவர் 500க்கு 437 மதிப்பெண் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.

இவர் சிறுவயதில் மின்சாரம் தாக்கியதால் தனது இரு கைகளை இழந்த நிலையில் பெற்றோர்களின் அரவணைப்பால் துவண்டு போகாமல் தன்னம்பிக்கையுடன் படித்து வருகிறார்.

இந்த நிலையில் கீர்த்தி வர்மாவின் திறமையை கேள்விப்பட்ட சில தனியார் பள்ளிகள் அவருக்கு 11ஆம் வகுப்பு படிக்க அழைப்பு விடுத்தன. ஆனால் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளாத கீர்த்தி வர்மா தொடர்ந்து அரசு பள்ளியில் தான் படிப்பேன் என்றும் என் வெற்றிக்கு அரசு பள்ளியும், அரசு பள்ளி ஆசிரியர்கள் தான் காரணம் என்றும் பெருமிதத்துடன் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த மாணவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் சூப்பர் அப்டேட் தந்த தயாரிப்பு நிறுவனம்.. ரசிகர்கள் குஷி..!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

தொழிலதிபர் ஆகிறாரா விக்னேஷ் சிவன்? அப்ப அடுத்த படம் எப்போது?

இயக்குனர் விக்னேஷ் சிவன் விரைவில் தொழிலதிபராக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது அடுத்த படம் காலதாமதம் ஆகும் என்று தெரிகிறது.

கார்த்தியின் அடுத்த படத்தில் எம்ஜிஆர் கனெக்சன்.. டைட்டில் என்ன தெரியுமா?

கார்த்தி அடுத்த படத்தில் எம்ஜிஆர் ரசிகராக நடிக்க இருப்பதாகவும் அதனை அடுத்து இந்த படத்தின் டைட்டில் எம்ஜிஆர் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

'ரஞ்சிதமே' பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட சிறுவன்.. ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த க்யூட் வீடியோ..!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ரஞ்சிதமே' என்ற பாடல் மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில்

குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு விசிட்… இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் வைரல் புகைப்படம்!

இந்திய அளவில் பிரபல இயக்குநராக உருவெடுத்திருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன