கன்னத்தில் தட்டிய பெண் நிருபருக்கு கவர்னர் அனுப்பிய கடிதம்

  • IndiaGlitz, [Wednesday,April 18 2018]

நிர்மலாதேவி விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அந்த சந்திப்பு முடிந்ததும் பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தில் தட்டி, நீங்கள் என் பேத்தி போல் இருப்பதாக கூறினார். 

பேத்தி வயதை உடையவர் என்றாலும் பெண் நிருபரின் கன்னத்தில் தட்டியது அவர் வகித்து வரும் கவர்னர் பதவிக்கு அழகல்ல என்று எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சனம் செய்தனர். அந்த பெண் நிருபரும் இதுகுறித்து காட்டமான டுவீட் ஒன்றையும் பதிவு செய்திருந்தார். 

இந்த நிலையில் இன்று கவர்னர் பன்வாரிலால் அந்த பெண் நிருபருக்கு எழுதிய கடிதத்தில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். எனது பேத்திபோல் நினைத்து கன்னத்தில் தட்டியதாகவும், அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், இருப்பினும் அந்த செயல் உங்கள் மனதை நோகடித்திருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் கவர்னர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்,. 

இந்த கடிதம் குறித்து அந்த பெண் நிருபர் தனது டுவிட்டரில், 'கவர்னரை மன்னிப்பை ஏற்று கொள்வதாகவும், ஆனாலும் அவர் கூறிய காரணத்தை நான் ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளார். 

More News

தளபதியின்மெர்சலுக்கு கிடைத்த மேலும் ஒரு கெளரவம்

'மெர்சல் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் டீசர் உலக சாதனை செய்தது மட்டுமின்றி ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்த படமாகவும் அமைந்தது.

கணவருக்கு பெண்களை சப்ளை செய்தாரா பிரபல நடிகை: சமூக ஆர்வலரின் திடுக்கிடும் குற்றச்சாட்டு

நடிகை ஜீவிதா தனது கணவர் டாகர் ராஜசேகருக்கு இளம்பெண்களை சப்ளை செய்ததாக சமூக ஆர்வலர் சந்தியா என்பவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தின்போது தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்யாவின் மனைவி யார்? ஏமாற்றிய எங்க வீட்டு மாப்பிள்ளை

ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள போகும் பெண் யார் என்ற கேள்விக்கு நேற்றைய 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் தெரிய வரும் என்று கூறப்பட்டது.

நான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: தமிழ் நடிகை

திருமணம் ஆன நடிகைகள் முத்தக்காட்சியில் நடிப்பதற்கே தயக்கம் தெரிவித்து வரும் நிலையில் நான் நிர்வாணமான நடிக்க கூட என் கணவர் எனக்கு முழு உரிமை கொடுத்துள்ளார் என்று தமிழ் நடிகை ஒருவர் கூறியுள்ளார். 

பிரபாஸ் படத்தில் இணைந்த இரண்டு பெரிய நிறுவனங்கள்

சாஹோ திரைப்படத்திற்காக டீ சீரிஸின் பூஷன் குமார், பிரபாஸ் மற்றும் தென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணைகிறார்.