close
Choose your channels

'புலி' படத்திற்கு தடை கேட்ட வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு

Tuesday, September 29, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தஞ்சையை சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் தான் இயக்கிய 'தாகபூமி' என்ற குறும்படத்தின் கதையை தழுவி 'கத்தி' படம் உருவாக்கப்பட்டதாகவும், இதற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் உள்பட படக்குழுவினர் தனக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் விஜய் நடித்த 'புலி' படத்தையும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'அகிரா' படத்தையும் தடை செய்ய வேண்டும் என புதிய மனு ஒன்றையும் கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று தஞ்சை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை வரும் அக்டோபர் 7ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். மேலும் 'புலி' படத்தை அக்டோபர் 1ஆம் தேதி தடை செய்வது குறித்து அவர் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே 'புலி' படத்தின் ரிலீஸுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment