தமிழ்நாட்டில் பிரபல சோப் கம்பெனியின் தொழிற்சாலை.. 50% பெண்களுக்கு 5% மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை..!

  • IndiaGlitz, [Monday,January 08 2024]

இந்திய அளவில் சோப்பு விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் கோத்ரேஜ் நிறுவனம் தனது புதிய சோப் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க இருப்பதாகவும் இந்த தொழிற்சாலையில் 50 சதவீதம் பெண்களுக்கும் 5 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடந்து வரும் நிலையில் பிரபல இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கலந்து கொண்டன. மேலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் நிஷாபா கோத்ரேஜ் அவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தங்களுடைய புதிய சோப் தொழிற்சாலையை தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டில் அமைக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த தொழிற்சாலையில் பெண்களுக்கு 50% வேலை வாய்ப்புகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% வேலை வாய்ப்புகளும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

மேலும் கோத்ரெஜ் நிறுவனத்தின் தலைவர் நிஷாபா, மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அமையவுள்ள கோத்ரெஜ் புதிய சோப் நிறுவனத்தில் 50 சதவீதம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு என்ற அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

More News

எதிர்பார்க்காத கூட்டணி.. 'தலைவர் 172' படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'லால்சலாம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அவர் தற்போது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்

தளபதி விஜய்யின் 'GOAT' படத்தின் அடுத்தடுத்த படப்பிடிப்புகள் எங்கே? மாஸ் தகவல்..!

 தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'GOAT' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில்

நயன்தாரா படத்தில் சர்ச்சை காட்சிகள்? போலீசில் புகார் அளித்த அரசியல் கட்சி பிரமுகர்..!

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக மும்பை போலீசில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறகடிக்க ஆசை: மீனா-முத்து கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி.. தொடங்குகிறது மனோஜ்-ரோஹினி பிரச்சனை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் கடந்த சில மாதங்களாக மீனா மற்றும் முத்து ஆகிய

இது என்ன சம்மரா? திருமணமாகி குழந்தை பிறந்த பின்னரும் பிகினியில் பிரபல நடிகை..!

சூர்யா கார்த்தி உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை துபாயில் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில்