'கோட்' 3வது சிங்கிள் பாடல் எப்போது? அதிகாரபூர்வமாக அறிவித்த ஏஜிஎஸ்..!

  • IndiaGlitz, [Thursday,August 01 2024]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’கோட்’ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியை ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

’கோட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 3ஆம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் வெளியாகும் நேரம் மற்றும் பாடலை பாடியவர்கள் எழுதியவர்கள் குறித்த விவரங்கள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தளபதி விஜய் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர். ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களை போலவே இந்த பாடலும் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.

More News

திரையுலக நட்சத்திரம் அனுமோகனின் ஆன்மீக பயணம்

பிரபல திரைப்பட நடிகர் அனுமோகன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது ஆன்மீக பயணம் மற்றும் நம்பிக்கைகள் குறித்து பகிர்ந்துள்ளார்.

வயநாடு செய்திகள் கேட்க கேட்க மனசு பதறுது.. நிலச்சரிவு குறித்து நடிகர் சூரியின் பதிவு..!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது இரங்கலை நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவு: சூர்யா, கார்த்தி, ஜோதிகா சேர்ந்து கொடுத்த பெரும் தொகை..!

வயநாடு அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள், தொழில் அதிபர்கள் நிதியுதவி செய்து வரும் நிலையில் நடிகர்கள் சூர்யா. கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா

தனுஷ் - விக்ரம்: ஒரே நேரத்தில் 2 படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

தனுஷ் மற்றும் விக்ரம் ஆகிய இரு நடிகர்களின் படங்கள் அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

'துர்கா'விற்கு கிடைத்த அங்கீகாரம் கிடைத்துவிட்டது: நடிகை துஷாரா விஜயன்

'ராயன்' திரைப்படத்தில் நான் நடித்த துர்கா கேரக்டருக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது என நடிகை துஷாரா விஜயன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: