'கோட்' படத்தின் பட்ஜெட் எவ்வளவு? தயாரிப்பாளரே சொன்ன ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Monday,June 24 2024]

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஒரு பக்கம் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த தயாரிப்பாளர் சுரேஷ் கல்பாத்தி இந்த படத்தின் பட்ஜெட் 300 கோடி ரூபாய் என்று கூறியுள்ளார்.

மேலும் தங்களது தயாரிப்புகளில் இந்த படம் தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் தளபதி விஜய் மிகவும் மதிப்புமிக்க ஸ்டார் என்பதால் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் தயாரித்தாலும் எங்களுக்கு லாபம் வரும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் தற்போது அவரது படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 300 கோடியில் விஜய் சம்பளம் மட்டும் 200 கோடி என்று கூறப்படும் நிலையில் மீதமுள்ள 100 கோடியில் தான் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீசியன்கள் சம்பளம் மற்றும் படப்பிடிப்பு செலவு ஆகி உள்ளது என்று கூறப்படுகிறது.

 

More News

'அரண்மனை 4' படத்தில்  போட்டி.. ராஷி கண்ணாவை வீட்டிற்கு அழைத்து தமன்னா செய்த தரமான செயல்..!

சமீபத்தில் வெளியான 'அரண்மனை 4' திரைப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகம் முழுவதும்

உறுதி செய்யப்பட்ட 'தளபதி 69'.. அட்வான்ஸ் பணம்.. விஜய் சம்பளம் இத்தனை கோடியா?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இன்னும் அவர் ஒரே ஒரு படம் நடிப்பார் என்றும் 'தளபதி 69' என்ற அந்த படம் தான் அவரது கடைசி படம்

தனுஷ் முன் நடந்த விபரீதம்.. மன்னிப்பு கேட்ட நாகார்ஜூனா.. என்ன நடந்தது?

நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகர் தனுஷ் விமான நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபரீத செயலுக்கு நாகார்ஜுனா மன்னிப்பு கேட்டு தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஏஐ மூலம் பவதாரிணி குரல்.. 'லால் சலாம்' படத்திற்கு உதவிய அதே நிறுவனம்.. புதிய தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் நேற்று வெளியான நிலையில் இந்த பாடலில் பவதாரிணி குரல் ஏஐ டெக்னாலஜி மூலம் பயன்படுத்தப்பட்டிருந்தது

29 ஆண்டுகளுக்கு பின் முதல் பட நாயகனை சந்தித்த பிரபல நடிகை.. எமோஷனல் பதிவு..!

பிரபல பாலிவுட் நடிகை 29 ஆண்டுகளுக்கு பின் தனது முதல் பட நாயகனை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து எமோஷனல் ஆக சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.