தமிழ்நாட்டில் 'கோட்' படத்தின் முதல் காட்சி எத்தனை மணிக்கு? விறுவிறுப்பான முன்பதிவு..!

  • IndiaGlitz, [Monday,September 02 2024]

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி எத்தனை மணிக்கு என்பது குறித்த தகவல் தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் முதல் காட்சி 9 மணிக்கு மட்டுமே தொடங்கப்படும் நிலையில் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டும் தமிழக அரசின் சிறப்பு அனுமதி பெற்று 7 மணி காட்சி திரையிடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என்ற நிலையில் ‘கோட்’ படத்திற்கும் 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவையில் உள்ள ஒரு தியேட்டரில் அதிகாலை 7 மணி காட்சிக்கு முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் இந்த படம் தமிழ்நாட்டின் முதல் காட்சி 7 மணிக்கு தொடங்கும் என்று கூறப்படுகிறது. ‘கோட்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசிடம் விண்ணப்பித்து 7 மணி காட்சிக்கு அனுமதி பெற்று விடும் என்ற நம்பிக்கையின் காரணமாக தான் 7 மணி காட்சிக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

'விடாமுயற்சி'யை அடுத்து அஜித்தின் அடுத்த படத்திலும் த்ரிஷா.. வேற லெவல் தகவல்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் அவருடைய மனைவியாக நடிகை த்ரிஷா நடித்துள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படத்திலும் த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'புஷ்பா 2' ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம்.. இந்திய திரையுலகில் முதல் முறை..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியதாகவும் இந்திய திரை உலகில் இதுவரை எந்த

ஆத்தா மாதிரி நீயும் அவிசாரின்னு பேர் எடுக்கனும்ன்னு நினைக்கிறியா? 'கோழிப்பண்ணை செல்லத்துரை' டிரைலர்..!

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகிய 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கார்த்திகை தீபம் தொடரில் திடீர் திருப்பம்.. நாயகிக்கு இரட்டை வேடமா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற தொடரில் கார்த்திக் ராஜ் மற்றும் ஆர்த்திகா நடித்து வரும் நிலையில் இந்த தொடரில் ஆர்த்திகா இன்னொரு கேரக்டரில் நடித்து

எனக்கு தளபதி மாமா, இளையதளபதிக்கு நா மாமா - GOAT கதையை உளறிய பிரேம்ஜி

" எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ணமாட்டோமா " என்ற புகழ்பெற்ற வசனத்தின் நாயகன், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி ஆவார்.