டபுள் டிகிரி வாங்கிய 'கோட்' பட நடிகரின் மகன்.. குவியும் பாராட்டுக்கள்..!

  • IndiaGlitz, [Monday,May 06 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தில் நடிக்கும் நடிகரின் மகன் டபுள் டிகிரி வாங்கிய தகவல் அவரது மனைவியின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தில் நடிக்கும் நடிகர்களில் ஒருவர் யுகேந்திரன். பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் மகனான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார் என்பது தெரிந்தது. சமீபத்தில் தான் இவர் ‘கோட்’ படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டது என்பதும் ஒரு பேட்டியில் அவர் இதனை தெரிவித்து இருந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

விஜய் நடித்த ’திருப்பாச்சி’ திரைப்படத்தில் நடித்த யுகேந்திரன் அதன்பிறகு 18 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் மீண்டும் நடிப்பதாகவும் அப்போது இருந்தது போலவே மிகவும் எளிமையாகவும் அன்பாகவும் விஜய் இருப்பதை பார்த்து தான் ஆச்சரியம் அடைந்ததாகவும் யுகேந்திரன் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் யுகேந்திரன் மற்றும் ஹெய்மாமாலினி தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் இருக்கும் நிலையில் அவர்களில் விஷாஷன் நாராயணன் என்பவர் தற்போது டபுள் டிகிரி பெற்றுள்ளார். சுற்றுப்புற சூழல் அறிவியல் மற்றும் உயிரியல் ஆகிய இரண்டு துறைகளில் டிகிரி பெற்றதை அடுத்து இதனை ஹெய்மாமாலினி பெருமையுடன் தனது மகன் டிகிரி வாங்கிய புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

ஒரு வழியாக காதலர் இவர் தான் என ஒப்புக்கொண்டாரா பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா?

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா கடந்த சில வருடங்களாக அருண் பிரசாத் என்ற சீரியல் நடிகரை காதலித்துக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள கமெண்ட் அதனை உறுதி

யூடியூபர் வேடத்தில் ஜிவி பிரகாஷ்.. டிடெக்ட்டிவ் வேடத்தில் கெளதம் மேனன்.. தொடங்கியது டப்பிங் பணிகள்..!

யூடியூபர் வேடத்தில் ஜிவி பிரகாஷ், டிடெக்டிவ் வேடத்தில் கௌதம் மேனன் நடித்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உங்க இஷ்டத்துக்கு வதந்தி பரப்பாதீங்க.. மலேசியாவில் இருந்து விளக்கமளித்த தமிழ் சீரியல் நடிகை.!

தமிழ் சீரியல் நடிகை ஒருவர் முக்கிய சீரியலில் இருந்து விலகப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது மலேசியாவில்  கணவருடன் இருக்கும் அவர் அங்கிருந்து கொண்டே இந்த வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் படத்தின் டைட்டில் இதுதான்.. 2 நாயகிகள் அறிவிப்பு..!

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய

மீண்டும் ஜெயம் ரவி வெளியேறுகிறாரா? அவருக்கு பதில் இவரா? 'தக்லைஃப்' படத்தில்  என்னதான் நடக்குது?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்திலிருந்து  ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் விலகியதாகவும்