'சூர்யா 44' படத்தில் 'கோட்' நடிகர்.. கார்த்திக் சுப்புராஜ் வேற லெவல் திட்டம்..!

  • IndiaGlitz, [Tuesday,September 10 2024]

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர் விரைவில் ’சூர்யா 44 ’ படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஜெயராம் நடித்து வரும் நிலையில் அவருடைய மகன் காளிதாஸ் ஜெயராம் இணைந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது ‘கோட்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த பிரசாந்த் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பிரசாந்த் மட்டுமின்றி இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடிக்க உள்ளது என்பது தெரிய வருகிறது.

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகவுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன..

More News

என்னங்க இவ்வளவு காய்ஞ்சு போயா இருக்கீங்க.. சமீபத்திய சர்ச்சை குறித்து இயக்குனர் செல்வராகவன்..!

சமீபத்தில் சென்னையில் உள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மாணவிகள் மத்தியில் பேசியது பெரும் சர்ச்சை ஆகி உள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது

மனைவியிடம் இருந்து விவாகரத்து: குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஜெயம் ரவி..!

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதற்கும் தயாராக இருக்க வேண்டும்: நடிகைகள் பாலியல் விவகாரம் குறித்து சன்னி லியோன்..!

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக கடந்த பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு

நான் குழந்தை பெற்றால் செத்துவிடுவேன்: பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்..!

நான் குழந்தை பெற்றால் நானும் செத்து விடுவேன், எனக்கு பிறக்கும் குழந்தையும் செத்துவிடும் என்று பிரபல நடிகை ஒருவர் கூறியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் - சல்மான்கான் படத்தில் இணைந்த 'துப்பாக்கி' நாயகி.. குவியும் வாழ்த்துக்கள்..!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடிப்பில் உருவாகும் 'சிக்கந்தர்' என்ற படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் தற்போது