இரண்டு பிரபலங்கள் இணையும் படத்தின் டைட்டில் 'கோல்மால்'

  • IndiaGlitz, [Sunday,October 10 2021]

தமிழ் திரையுலகில் இரண்டு பிரபல நடிகர்கள் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு ‘கோல்மால்’என்ற டைட்டில் வைக்கப்பட்டு, டைட்டில் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

தமிழ் திரை உலகில் இளைய தலைமுறை நடிகர்களான ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா ஆகிய இருவரும் இணைந்த ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் டைட்டில்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது என்பதும் இந்த படத்திற்கு ‘கோல்மால்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜீவா, மிர்ச்சி சிவா ஆகிய இருவரும் காமெடியில் கலக்குவார்கள் என்பதால் இந்த படம் ஒரு காமெடி விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நாயகிகளாக பயல்ராஜ்புத், தன்யா ஹோப் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்குமரன் இயக்கத்தில் ஜாக்குவார் ஸ்டூடியோ நிறுவனத்தின் பி வினோத் ஜெயின் என்பவரின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சூர்யாவின் 'ஜெய்பீம்' படம் குறித்த சூப்பர் அப்டேட்: வைரல் வீடியோ!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' என்ற திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி விருந்தாக அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சகோதரி செண்டிமெண்ட்: கமல் முன் ப்ரியங்காவை அக்காவாக ஏற்றுக்கொண்ட போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமலஹாசன் தோன்றிய நாள் என்பதால் கலகலப்பாக சென்றது என்பதும் ஒரு சில நேரங்களில் சென்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை, அரசியல் உள்ளர்த்த காட்சிகளும் இருந்தன

சார சார காற்றே, பொங்கி வழிகிறதே சந்தோச ஊற்றே: 'அண்ணாத்த' பாடல் வைரல்!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

ஃபேண்டஸி திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி: இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் திரை உலகின் நடிகர், இசையமைப்பாளர் மற்றும் இயக்குனரான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'சிவகுமாரின் சபதம்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

கணவர் மறைவுக்கு பின் வேறு காதலா? பிக்பாஸ் பாவனி ரெட்டியின் சகோதரியின் பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாவனி ரெட்டி சமீபத்தில் தனது உருக்கமான கதையைக் கூறினார் என்பதும் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டபோது தான் அழவில்லை என்றும்