ஒரே நேரத்தில் 3 சிகரங்களில் ஏறி சாதனை படைத்த 12 வயது சிறுமி…!

  • IndiaGlitz, [Thursday,July 27 2023]

கோவா மாநிலத்தில் வசித்துவரும் 12 வயது சிறுமி ஒருவர் லடாக் பள்ளத்தாக்கில் இருக்கும் 6,000 மீட்டருக்கு மேல் அளவுள்ள 3 சிகரங்களில் அதுவும் 62.5 மணி நேரத்திற்குள் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் மலைக்க வைக்கும் எதிர்காலத் திட்டத்துடன் இவர் பயிற்சி செய்துவருவதும் ஆச்சர்யப்பட வைக்கிறது.

கோவாவில் உள்ள ஞாயன் விகாஸ் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்துவருபவர் குஞ்சன் பஞ்கஜ் பிரபு நர்வேகர். 12 வயதான இவர் மலையேறுவதில் பயங்கர ஆர்வத்துடன் சிறு வயது முதலே பயிற்சி எடுத்துவருகிறார். இதையடுத்து லடாக் மாநிலத்தின் மார்கா பள்ளத்தாக்கில் இருக்கும் காங் யாட்சே-II (6250 மீ), மவுண்ட் ரேபோனி மல்லாரி – I (6097 மீ), மவுண்ட் ரெபோனி மல்லாரி-II (6113 மீ) ஆகிய 3 சிகரங்களையும் வெறுமனே 62.5 மணி நேரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

ஒவ்வொரு சிகரமும் 6,000 மீட்டருக்கு மேலுள்ள நிலையில் 3 சிகரத்தையும் ஒரே நேரத்தில் ஏறி சாதனை படைத்துள்ள குஞ்சன் பஞ்கஜ் தற்போது இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். மேலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதுதான் தன்னுடைய வாழ்நாள் சாதனையாக இருக்கும் என்றும் கூறியுள்ள அவர் அதற்காக கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகிறாரார் குஞ்சன் பங்கஜ்.

மேலும் இந்தியாவில் 16 வயது நிரம்பி இருந்தால் மட்டுமே 7,000 மீட்டருக்கு மேலுள்ள சிகரங்களில் ஏற முடியும் என்று கூறப்பட்டு உள்ள நிலையில் இதற்காக வெளியே இருந்து மலையேற்றத்தில் ஈடுபடவும் முயற்சித்து வருகிறாராம்.

12 வயது 3 சிகரங்களில் ஏறி சாதனை படைத்துளள இவர் தன்னுடைய அனுபவத்தை குறித்து பேசும்போது, வானிலை மோசமாக இருந்தது. இந்த மாதம் பனி பெய்யும் என்று எதிர்பார்க்காததால் நாங்கள் சென்றபோது தெளிவான வானத்தை எதிர்பார்த்தோம். அதிக பனிப்பொழிவு இல்லை. குறைந்த பனிப்பொழிவு காரணமாக அது மிகவும் கடினமாக இருந்தது. நடக்கும்போது நம் கால்கள் பனியில் முழங்கால் நீளத்திற்கும் சில இடங்களில் இடுப்பு நீளத்திற்கும் செல்லும், அதை அகற்றுவது எங்களுக்கு மிகவும் சோர்வாக இருக்கும். ஆனால் நாங்கள் எந்த காயத்தையும் சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குஞ்சன் பஞ்கஜ் உலகத்திலேயே பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரம் மற்றும் அன்னபூர்ணா சிகரம் இரண்டிலும் ஏறி இந்த நாட்டிற்கும் தனது பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

நடிகை ராஷ்மிகா ரகசிய திருமணம் செய்துகொண்டாரா? லவ்வர் பற்றிய செம ஷாக்கான தகவல்…!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் ராஷ்மிகா மந்தனா ரகசியத் திருமணம்

4 டிகிரி குளிர்.. 6 நிமிடங்கள் ஐஸ் பாத்  எடுத்த   சமந்தா.. வைரல் வீடியோ..!

 நடிகை சமந்தா தற்போது வெளிநாட்டு சுற்றுலாவில் இருக்கிறார் என்பதும் அவர்  வெளிநாட்டில் தங்கியிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

'வீரன்' இயக்குனரின் அடுத்த படம்.. சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்.. அதிரடி அறிவிப்பு..!

சமீபத்தில் வெளியான ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த 'வீரன்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஏஆர்கே சரவணன் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜீன்ஸ் உடையில் சரண்யா பொன்வண்ணன்.. மகள், கணவருடன் க்யூட் புகைப்படங்கள்..!

நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு அவர் ஜீன்ஸ் உடையில் கலக்கலான புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'மாமன்னன்' உள்பட 3 தமிழ்ப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தபட்சம் நான்கு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்