மனித குடலில் இருந்த கண்ணாடி டம்ளர்? மருத்துவர்களே அதிர்ந்துபோன சம்பவம்!

  • IndiaGlitz, [Monday,February 21 2022]

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்குக் கடுமையான வயிற்றுவலி மற்றும் மலச்சிக்கல் ஏற்பட்டதையடுத்து மருத்துவர்கள் அவருடைய வயிற்றில் இருந்து கண்ணாடி டம்ளரை அறுவை சிகிச்சைமூலம் அகற்றியிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் மஹுவா பகுதியைச் சேர்ந்த 55 வயதான நபர் ஒருவர், தான் கண்ணாடி டம்ளரை விழுங்கிவிட்டேன், அதனால் கடுமையான வயிற்றுவலி மற்றும் மலச்சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது எனக் கூறி முசாப்பூர் பகுதியிலுள்ள மருத்துவமனையை நாடியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன மருத்துவர்கள் ஸ்கேன் செய்து அந்த நபரைப் பரிசோதித்துள்ளனர். மேலும் உண்மையில் அந்த நபரின் குடலில் கண்ணாடி டம்ளர் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து எண்டோஸ்கோபி அறுவைச் சிகிச்சை மூலம் அந்த நபரின் மலக்குடலில் இருந்து கண்ணாடி டம்ளர் நீக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் குறுகிய வழியைக் கொண்டிருக்கும் உணவு குழாயில் எப்படி ஒரு கண்ணாடி டம்ளர் நுழைந்திருக்கும் சந்தேகத்தை மருத்துவர்கள் எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அந்த நபரிடம் கேட்டபோது டீ குடிக்கும்போது அப்படியே விழுங்கிவிட்டேன் எனக் கூறி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து உண்மையில் ஒரு மனிதன் டம்ளரை விழுங்க முடியுமா? என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் தனியுரிமையை காரணம் காட்டி இதுகுறித்த அந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் பேச மறுத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

More News

கடற்கரையில் ஒரு நாள்… நடிகை சாயிஷா பதிவிட்ட மாஸான புகைப்படம் வைரல்!

சினிமா பின்புலம் கொண்ட நடிகை சாயிஷா தமிழ், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே

விஜய்சேதுபதி பட ஹீரோயின் இன்ஸ்டாகிராம் முடக்கம்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

விஜய் சேதுபதியுடன் 8 திரைப்படங்களில் நடித்த நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

புனித் ராஜ்குமார் குடும்பத்தில் மீண்டும் ஒரு மாரடைப்பு மரணம்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

 பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததால்அவரது குடும்பத்தினர் நிலைகுலைந்து போயினர்

ஆர்கே செல்வமணி படம் இயக்கினார் என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது: பாக்யராஜ்

இயக்குனர் ஆர் கே செல்வமணி பல வெற்றிப்படங்களை இயக்கியதாக கூறுகிறார்கள், ஆனால் அந்த படங்களை எல்லாம் அவர் தான் இயக்கினாரா? என்ற சந்தேகம் எனக்கு உள்ளது என இயக்குனர்

சமந்தாவின் அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

பிரபல நடிகை சமந்தா நடித்து வரும் படத்தின் அட்டகாசமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.