வாரம் 2 நாள் லீவு விடுங்க: பொள்ளாச்சி விவகாரம் குறித்து நடிகர் விவேக்

செல்போன், இண்டர்நெட் என்று வந்ததோ அன்றுமுதல் பெற்றோர் உள்பட உறவுகளிடம் பேசுவதே குறைந்து விட்டது. ஒரே வீட்டில் இருந்தாலும் அப்பா, அம்மா, பிள்ளைகள் என ஆளுக்கொரு மொபைலை கையில் வைத்து கொண்டு அதில் மூழ்கி விடுகின்றனர். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசுவதே இல்லை. இதுவே பின்னாளில் பல பிரச்சனைகளுக்கு காரணமாகி விடுகிறது.

இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வாரத்தில் இரண்டு நாட்கள் இண்டர்நெட்டை இளையதலைமுறையினர் பயன்படுத்த வேண்டாம் என்றும், அந்த இரண்டு நாட்களில் பெற்றோர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் என்றும், விளையாட்டில் ஈடுபடுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் மனம் ரிலாக்ஸ் ஆவதுடன் இண்டர்நெட்டில் அடிமையாகும் ஆபத்தும் நீங்குகிறது, குற்றச்செயல்களும் குறைகிறது என தெரிய வந்துள்ளது.

இதனை குறிப்பிட்ட நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில், 'ஜப்பானில் வாரம் இரு நாட்கள் “ internet fasting” அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்த இரு நாட்களில் இளைய சமுதாயம், நெட் பக்கம் போகாமல் பெற்றோர், நண்பர்கள், விளையாட்டு, இயற்கை என்று இருக்க வேண்டுமாம்! இண்டர்நெட்டுக்கு அடிமையாகாமல் இருக்க இந்த திட்டம் ஒரு நல்ல திட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட அனைவரும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் இண்டர்நெட்டுக்கு விடுமுறை அளித்தாலே போதும், பல பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

More News

செல்போன்கள் கையிலிருக்கும் அணுகுண்டு: உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கருத்து!

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் போன்ற கொடூரமான சம்பவங்கள் நடைபெற முக்கிய காரணங்களில்து சமூக வலைத்தளங்களும் ஒன்று.

வெட்டி சாகடியுங்கள்: பொள்ளாச்சி குற்றம் குறித்து ஐஸ்வர்யா தத்தா

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து திரையுலகினர் பலர் கடும் ஆத்திரத்துடன் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ள நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஐஸ்வர்யா தத்தா வீடியோ

'ஐரா' படத்தில் நயன்தாராவின் கேரக்டர்: இயக்குனர் சர்ஜூன் தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ஜோதிகாவின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்

ஜோதிகா நடித்த 'காற்றின் மொழி' படத்திற்கு பின் அவர் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

தேர்தலில் போட்டி: கமல் எடுத்த முக்கிய முடிவு!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்து, போட்டியிட விரும்புபவர்களிடம்