பிரதமர், முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டு ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை முயற்சி செய்த இளம்பெண்

  • IndiaGlitz, [Wednesday,October 03 2018]

கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரதமர் மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஃபேஸ்புக் நேரலையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு இளம்பெண் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் ஹஞ்சினாலா தாண்டா கிராமத்தை சேர்ந்த லதா என்ற இளம்பெண், தங்கள் குடும்பத்தினர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டதாக பிரதமர், முதல்வர் ஆகியோர்களுக்கு கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சி தலைவர் உள்பட உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டதால் தனது கல்லூரி படிப்பு பாதியில் நின்று போனதை எண்ணி மனமுடைந்த லதா, ஃபேஸ்புக் நேரலையில் சில கோரிக்கைகளை வைத்துவிட்டு பின்னர் கண்ணீருடன் தூக்க மாத்திரை மற்றும் விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் போலீஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பினர் அவரது குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

More News

ஜோதிகாவின் 'காற்றின் மொழி' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவான 'காற்றின் மொழி' திரைப்படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளியிட திட்டமிடப்பட்டது

தமிழகத்திற்கு வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்த தேதி

கேரளாவில் கடந்த மாதம் வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்த நிலையில் அங்கு வரலாறு காணாத கனமழை, பெருவெள்ளம் ஏற்பட்டு கடவுளின் தேசம் என்று கூறப்படும் அம்மாநிலமே சிறுசிறு தீவுகளாக மாறியது.

தொடரும் முதல் காட்சி ரத்து படங்கள்

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரைப்படங்கள் ரிலீசாகி கொண்டிருந்த நிலையில் தற்போது அது வியாழக்கிழமையாக மாறிவிட்டது

'96' திரைப்படம்: த்ரிஷாவிடம் விஜய்சேதுபதி வைத்த வித்தியாசமான கோரிக்கை

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உலகம் முழுவதும் இன்று வெளியாகவுள்ள திரைப்படம் '96'. இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சி கடந்த திங்கட்கிழமை திரையிடப்பட்டபோதே

ரஜினி பட இயக்குனரை அழைத்து பாராட்டிய கமல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு படங்களை தொடர்ச்சியாக இயக்கியதால் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்தவர் இயக்குனர் பா.ரஞ்சித்.